கவினை நினைத்து கண்ணீர் விட்ட சாண்டி !
By Aravind Selvam | Galatta | September 02, 2019 13:16 PM IST
சமீபத்தில் ஒளிபரப்பட்ட தமிழ் நிகழ்ச்சிகளில் மக்களின் மனம் கவர்ந்த ஒரு நிகழ்ச்சி பிக்பாஸ்.இரண்டு சீசனும் பெரிய வெற்றியை பெற்றதோடு நல்ல TRPயையும் பெற்றது.இந்த இரண்டு சீசனையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்.கமல்ஹாசனின் அரசியல் வசனங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது.
இரண்டு சீசனில் பங்குபெற்ற போட்டியாளர்களும் மக்கள் மத்தியில் நல்ல பிரபலமாகி விட்டனர்.முதல் இரண்டு சீசன்களை அடுத்து மூன்றாவது சீசனையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார்.இந்த சீசன் மே 23ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் சாண்டி கவினையும் லாஸ்லியாவையும் நாமினேட் செய்கிறார்.கவின் முதலில் வந்தது போல் இல்லை வீட்டிற்கு வந்தபோது மிகவும் கலகலப்பாக இருந்தான் ஆனால் இப்போது அப்படி இல்லை பழைய மாதிரி இரு இல்லையென்றால் கிளம்பு என்று சொல்லிவிட்டு கண்கலங்குகிறார்.