தனது “வாழ்நாள் அணி வீரர்கள்” என்ற தலைப்பிட்டு சச்சின் டெண்டுல்கர் சக வீரர்களுடன் புகைப்படத்தை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 2 ஆம் தேதி இந்தியா முழுவதும் விசேசமாகக் கொண்டாடப்பட்டது. அப்போது, மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபரான முகேஷ் அம்பானி வீட்டிலும், விநாயகர் சதுர்த்தி விழா பல்வேறு நட்சத்திரங்களுடன் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

former Indian teammates

இந்த விழாவில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், யுவராஜ் சிங், அஜித் அகர்கர், ஹர்பஜன் சிங், யுசப் பதான், ஷகீர்கான், பார்த்திவ் படேல், பிரக்யன் ஓஜா உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு வீரர்களுக்கும், சினிமா நட்சத்திரங்களுக்கும் குடும்பத்துடன் கலந்துகொண்டனர்.

former Indian teammates

விழாவின் ஒரு பகுதியாக அனைத்து விளையாட்டு நட்சத்திரங்களும், ஒன்றாகச் சேர்ந்து புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர். இந்த படங்களைத் தனது டிவிட்டர் மற்றும் இன்ஸ்டகிராம் பக்கத்தில் ஒவ்வொரு நட்சத்திரங்களாகப் பதிவிட்டு வருகின்றனர். அதன்படி, இந்தியாவின் முன்னாள் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்ந்த சச்சின், தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் சக வீரர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தைப் பகிர்ந்து, தனது “வாழ்நாள் அணி” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல், முன்னாள் நட்சத்திர வீரர் யுவராஜ் சிங், சக வீரர்களுடன் எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படத்தைத் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து “பழமை பொன் போன்றது” என்றும், ஆனால், தங்கள் வயதைக் குறிப்பிடும் வகையில் “ரொம்பவும் பழமை இல்லை” என்றும் பதிவிட்டுள்ளார்.

former Indian teammates

மேலும், கிரிக்கெட் வீரர்கள் தனது குடும்பத்தினருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை, ஹர்பஜன் சிங் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது, இந்த புகைப்படங்கள் எல்லாம் இணையத்தளத்தில் வைரலாகி வருகின்றன.