தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மக்கள் உள்ளம் கவர்ந்த நிகழ்ச்சி பிக்பாஸ். முதல் இரண்டு சீசன்கள் ஒளிபரப்பாகி முடிந்த நிலையில், தற்போது மூன்றாம் சீசன் துவங்கியது. கடந்த இரு சீசன் போலவே இந்த சீசனையும் உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்குகிறார். 

பிக் பாஸ் 3-க்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று அசத்தலாக துவங்கியது. தண்ணீர் மற்றும் எரிவாயுவிற்கு மீட்டர் பொறுத்தப்பட்டுள்ளது. இறுதியாக ஃபாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்தியா, மீரா மிதுன், ரேஷ்மா மற்றும் சரவணன் வீட்டை விட்டு வெளியேறினார்கள்.

சமீபத்தில் வீட்டை விட்டு வெளியேறிய ரேஷ்மா, கலாட்டா குழுவிற்கு சிறப்பு பேட்டியளித்தார். அப்போது கூறுகையில், ஆரம்பத்தில் கவின் - சாக்ஷி காதலுக்கு துணை போனவர், பிறகு சாக்ஷியின் குணமறிந்து ஒதுங்கியதாக தெரிவித்தார்.