பிக்பாஸ் வீட்டில் இன்று வெளியான இரண்டாம் ப்ரோமோவில், பழைய பங்கேற்பாளர்கள் அதாவது வெளியேறிய நபர்கள் அனைவரும் வீட்டிற்கு வருகை தந்தனர். அப்போது பேசிய ரேஷ்மா, எமோஷனாகி கண்ணீர் விட்டார். எனக்கு முகெனை மிகவும் பிடிக்கும். உனக்கு யாருமில்லை என்று கூறாதே. வெளியே வந்தால் உனக்கே தெரியும் உன்னை எவ்வளவு பேர் நேசிக்கிறார்கள் என்று.

biggboss

பிக்பாஸ் தொடரின் மூன்றாவது சீசன் பல டாஸ்குகளுடன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்நிகழ்ச்சியில் பரபரப்பான திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. முகென் நேரடியாக ஃபைனலுக்கு செல்லும் கோல்டன் டிக்கெட்டை வென்றுள்ளார்.

biggboss

biggboss

மேலும் சீசன் துவங்கிய போதே ரேஷ்மாவை அம்மா என்று தான் அழைக்கிறார் முகென். அவர் சொல்வது போலவே முகென் வெளியே வந்தவுடன் அதிக சொந்தங்களை முகென் பெறுவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.