பிக்பாஸ் வீட்டில் இன்று வெளியான முதல் ப்ரோமோவில், பழைய பங்கேற்பாளர்கள் அதாவது வெளியேறிய நபர்கள் அனைவரும் வீட்டிற்கு வருகை தந்தனர். ரேஷ்மா, மீரா, மோகன் வைத்தியா மற்றும் ஃபாத்திமா பாபு வந்தனர். முகெனுக்கு ஏன் யாரும் உணவு ஊட்டவில்லை என்று அன்பாக கேள்வி எழுப்புகிறார் ரேஷ்மா.

biggboss

mugenrao

இந்த பிக்பாஸ் தொடரின் மூன்றாவது சீசன் பல டாஸ்குகளுடன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்நிகழ்ச்சியில் பரபரப்பான திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. முகென் நேரடியாக ஃபைனலுக்கு செல்லும் கோல்டன் டிக்கெட்டை வென்றுள்ளார். யாரும் எதிர்பாரத வாறு தர்ஷன் நேற்று வீட்டை விட்டு வெளியேறினார். குறைந்த வாக்குகள் பெற்றதால் தர்ஷன் எவிக்ட் ஆனார்.

sherin

reshma

தற்போது சாண்டி, ஷெரின், லாஸ்லியா, முகென் இந்த நான்கு பங்கேற்பாளர்களில் யார் பிக்பாஸ் சீசன் 3-ன் டைட்டில் வின்னர் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.