பி.வி.சிந்துவை தூக்கிட்டு வந்து திருமணம் செய்வேன் என்று முதியவர்கள் ஒருவர் சுவாரஸ்சியமான பீதியை கிளப்பி உள்ளார்.

இந்தியாவின் நட்சத்திர வீரங்கனையான பி.வி.சிந்து, சமீபத்தில் நடந்த உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில், தங்கம் வென்று அசத்தினார். இதனால், அவர் பாராட்டு மழையில் நனைந்து வந்தார்.

PV Sindhu

இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்த விரதக்குளம் பகுதியைச் சேர்ந்த 70 வயதான விவசாயி மலைச்சாமி, மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவிடம் ; பி.வி.சிந்துவின் புகைப்படம் ஒட்டப்பட்டப்பட்டிருந்த மனு ஒன்றை அளித்தார். அதில், விளையாட்டுத்துறையில் தீராத ஆர்வம் கொண்ட தான், பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவை காதலித்து வருவதாகவும், தனக்கு 16 வயது மட்டுமே நடப்பதாகவும் கூறியுள்ளார்.

PV Sindhu

மேலும், நம் நாட்டில் உள்ள தீமைகளை அளிக்கவே, முதியவர் அவதாரம் எடுத்துள்ளதாக தெரிவித்த அவர், பி.வி.சிந்து எங்கிருந்தாலும் விடப்போவதில்லை என்றும், அவரைத் தூக்கி வந்து திருமணம் செய்தே தீருவேன் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

PV Sindhu

இந்த மனுவை பெற்றுக்கொண்டு படித்த பார்த்த மாவட்ட ஆட்சியர் என்ன சொல்வதென்று தெரியாமல், திகைத்து நின்றார். இதனைடுத்து, ஏதோ சொல்லி சமாளித்து அனுப்பி உள்ளார். தற்போது, இந்த சுவாரஸ்சியமான நிகழ்வு வைரலாகி வருகிறது.