தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனராய், மக்கள் மனதில் பல ஆண்டுகள் நீங்கா இடம்பிடித்தவர் இயக்குனர் மணிரத்னம். அமைதியான திரை சூழல், மனதை வருடம் வசனங்கள், சீரான கதை கரு என தமிழ் சினிமாவின் தரத்தை உயர்த்திய பெருமை இவரை சேரும். 

ponniyinselvan

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை இயக்குனர் மணிரத்னம் படமாக்க வெகு நாட்களாக முயற்சித்து வருகிறார். விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராய், அமிதா பச்சன், பார்த்திபன், ஜெயராம் போன்ற உச்ச நட்சத்திரங்கள் இதில் நடிக்கவுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

ponniyinselvan

சமீபத்தில் எழுத்தாளர் குமரவேல் படத்தின் திரைக்கதை பணிகள் முடிந்ததாக கூறினார். நடிகை த்ரிஷா முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்ற செய்தி வதந்தியாக பரவியது. தற்போது படத்தில் 12 பாடல்கள் உள்ளதாக செய்தி வெளியாகியது. வரலாற்று கதை நிறைந்த படமான இதில் இசைக்கு அதிக முக்கியத்துவம் இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர் ரஹ்மான் ரசிகர்கள்.

manirathnam