பொன்னியின் செல்வன் படம் குறித்த சிறப்பு தகவல் !
By Sakthi Priyan | Galatta | August 12, 2019 17:00 PM IST
தமிழ் சினிமாவின் legendry இயக்குனராய் மக்கள் மனதில் பல ஆண்டுகள் நீங்கா இடம்பிடித்தவர் இயக்குனர் மணிரத்னம். அமைதியான திரை சூழல், மனதை வருடம் வசனங்கள், சீரான கதை கரு என தமிழ் சினிமாவின் தரத்தை உயர்த்திய பெருமை இவரை சேரும்.
கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை இயக்குனர் மணிரத்னம் படமாக்க வெகு நாட்களாக முயற்சித்து வருகிறார். விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராய், பார்த்திபன் போன்ற உச்ச நட்சத்திரங்கள் இதில் நடிக்கவுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.
படத்தில் எழுத்தாளர் குமரவேல் திரைக்கதை துரையில் பணிபுரிந்து வருகிறார். இதுகுறித்து நடிகர் மற்றும் எழுத்தாளர் குமரவேலிடம் கலாட்டா சிறப்பு குழு கேட்டபோது, பொன்னியின் செல்வன் திரைக்கதையின் இறுதி கட்ட பணியில் இருப்பதாக தெரிவித்தார். விரைவில் திரைகதை பணிகள் முடிந்து படபிடிப்புக்கு செல்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.