மகளிடம் பாலியல் அத்துமீறல் ஈடுபட்ட தந்தை அதிரடியாக போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே உள்ள தானே பகுதியில் 35 வயது மதிக்கத் தக்க “மணி செட்டி” என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இதனால், அவர்களுடைய 10 வயது பெண் குழந்தை, தந்தையுடன் தனியாக வசித்து வந்தார்.

இந்நிலையில், மனைவி இறந்த நிலையில் ஏக்கத்திலிருந்த வந்த மணி செட்டி, வீட்டிலிருந்த தனது 10 வயது மகளை தன்னுடைய ஆசைக்கு இணங்க வற்புறுத்தியதாகத் தெரிகிறது. சம்பவத்தன்று, இரவு நேரத்தில் அவர்களது வீட்டிலிருந்து சிறுமியின் அலறல் சத்தம், வெளியே கேட்டுள்ளது. இதனால், அக்கம் பக்கத்தினர் அவர்கள் வீட்டிற்குள் ஓடி வந்து பார்த்துள்ளனர்.

அப்போது, தந்தை மணி செட்டி தன்னுடைய மகளிடம் தவறாக நடந்துகொள்ள முயன்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, அவரிடமிருந்து முதலில் சிறுமியை மீட்டுள்ளனர். பின்னர், போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து விரைந்து வந்த போலீசார், மகள் என்று கூட பாராமல் 10 வயது சிறுமியிடம் தவறாக நடந்துகொண்டதற்காக, மணி செட்டியை போக்சோ சட்டத்தில் கைது செய்து அழைத்துச் சென்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.