சிவகார்த்திகேயனை தொடர்ந்து சல்மான் கான் ! விவரம் உள்ளே
By Aravind Selvam | Galatta | August 21, 2019 13:19 PM IST
இந்தியன் சினிமாவின் மைக்கேல் ஜாக்சன் என்று அழைக்கப்படுபவர் பிரபுதேவா.நடன இயக்குனராகவும்,நடிகராகவும் தமிழ் மக்களின் நெஞ்சத்தில் இடம் பிடித்தார்.2007-ல் தளபதி விஜயை வைத்து போக்கிரி படத்தை இயக்கி வெற்றி கண்டு இயக்குனராகவும் தனது முத்திரையை பதித்தார்.
தமிழில் சில படங்கள் மட்டுமே இயக்கிய பிரபுதேவா பின் பாலிவுட்டில் வான்டெட்,ரவுடி ரத்தோர் உள்ளிட்ட படங்கள் மாபெரும் வெற்றியை பெற்றது.பின்னர் நடிப்பில் கவனம் செலுத்தி வந்த பிரபுதேவா.தற்போது ஹிந்தி சூப்பர்ஸ்டார் சல்மான் கான் நடிப்பில் உருவாகவுள்ள தபாங்-3 படத்தை இவர் இயக்குகிறார்.
இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சோனாக்ஷி சின்ஹா , கிச்சா சுதீப் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால் இந்த படத்தின் அனைத்து மொழிகளுக்குமான தமிழ்நாடு உரிமையை KJR ஸ்டுடியோஸ் கைப்பற்றியுள்ளது.
தல அஜித்தின் விஸ்வாசம் படத்தின் மூலம் வெற்றிகண்ட KJR ஸ்டுடியோஸ் , சிவகார்த்திகேயன் நடித்து வரும் ஹீரோ படத்தினை தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.இதனை தொடர்ந்து தற்போது சல்மான் கானின் தபாங்-3 பட உரிமையை கைப்பற்றியுள்ளது.
We're very excited to announce our association with @SKFilmsOfficial in the massively successful franchise film #Dabangg3!🔥 We will be distributing all languages of the film in Tamil Nadu! 🎥 Get ready for @beingsalmankhan’s action in @PDdancing's directorial 💥
— KJR Studios (@kjr_studios) August 21, 2019