சாண்டியிடம் கோபத்தை வெளிப்படுத்தும் கவின்
By Sakthi Priyan | Galatta | September 16, 2019 09:00 AM IST
தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மக்கள் உள்ளம் கவர்ந்த நிகழ்ச்சி பிக்பாஸ். முதல் இரண்டு சீசன்கள் ஒளிபரப்பாகி முடிந்த நிலையில், தற்போது மூன்றாம் சீசன் துவங்கி முடியும் கட்டத்திற்கு வந்தடைந்தது. கடந்த இரு சீசன் போலவே இந்த சீசனையும் உலக நாயகன் கமல் ஹாசன் வார இறுதியில் வந்து அசத்துகிறார்.
பிக் பாஸ் 3-க்கான டாஸ்க்குகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. லாஸ்லியா புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இறுதியாக ஃபாத்திமா பாபு, மோகன் வைத்தியா, மீரா மிதுன், ரேஷ்மா, சரவணன், சாக்ஷி, மதுமிதா, அபிராமி மற்றும் கஸ்தூரி வீட்டை விட்டு வெளியேறினார்கள். ரகசிய அறையில் இருந்து வீட்டிற்கு வந்தார் சேரன்.நேற்று வனிதா வீட்டை விட்டு வெளியேறினார்.
தற்போது வெளியான ப்ரோமோவில், இறுதி போட்டிக்கு யார் செல்ல வேண்டும் என்பதை போட்டி மூலம் தேர்வு செய்கின்றனர். இதற்கு நடுவில் சாண்டி மற்றும் கவின் சண்டை போட்டு கொள்கின்றனர்.
#TicketToFinale! #Day85 #Promo1 #பிக்பாஸ் - தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/8DpNhZ3o4i
— Vijay Television (@vijaytelevision) September 16, 2019