என்னை கட்டி அணைத்தார் தளபதி விஜய் - கதிர் !
By Aravind Selvam | Galatta | July 31, 2019 17:43 PM IST
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரம் என்பதை தாண்டி எப்போதும் ரசிகர்களை மதிக்கும் ஒரு நடிகர் என்றால் அது தளபதி விஜய் தான்.தெறி,மெர்சல் படங்களின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து தற்போது அட்லீ இயக்கத்தில் தயாராகி வரும் பிகில் படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் நயன்தாரா,ஜாக்கி shroff,கதிர்,விவேக்,யோகி பாபு,டேனியல் பாலாஜி,இந்துஜா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.ஏ.ஜி.எஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு இந்த படம் உருவாகி வரும் இந்த படத்தின் Firstlook போஸ்டர் மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த படத்தில் விஜய் ஒரு பாடலை பாடியுள்ளார் என்ற தகவலை படக்குழுவினர் வெளியிட்டனர்.
இந்த படத்தின் முதல் பாடலான சிங்கப்பெண்ணே வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ள கதிர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார்.பிகில் படத்தில் தனது ஷூட்டிங்கை முடிந்துவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த புகைப்படம் எப்படி இருக்கிறதோ அதே போல் தான் என் மனமும் மகிழ்ச்சியாக உள்ளது.நீங்கள் என்னை கட்டியணைத்து பாராட்டியது மிகவும் உணர்ச்சிபூர்வமாக இருந்தது உங்கள் அன்பிற்கு நன்றி விஜய் அண்ணா என்று தெரிவித்துள்ளார்.உங்களுடன் நடித்த தருணங்கள் மனதில் நீங்கா நினைவுகளாக உள்ளன.
இவை அனைத்தும் நடக்க காரணமாக இருந்த விஜயின் மேனேஜர் ஜெகதீஷ் மற்றும் இயக்குனர் அட்லீ அண்ணன் இருவருக்கும் நன்றி என்றும் தெரிவித்துள்ளார்.பிகில் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.விரைவில் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவடையும் என்று தெரிகிறது.
This photo speaks what my heart wants to speak!! Completed shooting for #BIGIL ! Ur hug gave me an emotional happiness n unconditional love @actorvijay na! Thank u & Love u so much for all the Best Moments. Thank u na @Atlee_dir @Jagadishbliss for making all these true pic.twitter.com/MvKIMIZnP8
— kathir (@am_kathir) July 31, 2019