தமிழ் திரையுலகின் சிறந்த கவிஞர்களில் ஒருவர் கபிலன் வைரமுத்து. திரைக்கதை எழுதுவதிலும் இவருக்கு நிகர் இவரே. இந்தியன் 2, சிண்ட்ரெல்லா, ஆலம்பனா மற்றும் நான் சிரித்தால் போன்ற படங்களில் பிஸியாக இருக்கும் இவர், சமூக ஊடகங்களிலும் ஆக்டிவாக இருக்கிறார். 

kabilanvairamuthu

டி.ராஜேந்தர் சாரோட பேசும்போது எங்கயோ பாத்துகிட்டு இருக்க, அந்த பொண்ணுகிட்டு பேசும்போது மட்டும் முகத்த உத்து பாத்து பேசற என நிகழ்கால தமிழ் சினிமாவைப் பற்றி எதுவுமே தெரியாதவர் ஒருவர் இந்த இரண்டு புகைப்படங்களையும் சேர்த்து அனுப்பி கிண்டலாகக் கேள்வி கேட்டார். அடேய் நண்பா.. அந்த முதல் புகைப்படத்தில் இருப்பது நானல்ல. அவர் நடிகர் விக்ரம் அவர்களின் புதல்வர் துருவ் விக்ரம் என்று பக்குவமாக பதில் அனுப்பியுள்ளார் கபிலன். 

kabilan vairamuthu

எழுத்துக்களுக்கு உயிர் கொடுக்கும் கவியுலக பிரம்மன் கபிலனின் இச்செயலை பாராட்டி வருகின்றனர் இணையதள வாசிகள்.