ஸ்க்ரீன் சீன் மீடியா என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் நடிப்பில் துரை இயக்கத்தில் உருவாகி வரும் திகில் திரைப்படம் இருட்டு. இந்த படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியானது.

sundarc

திகில் கலந்த காமெடி படமான அரண்மனையின் படத்தின் இரண்டு பாகங்களை இயக்கியுள்ள சுந்தர்.சி, இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். படத்தில் தன்ஷிகா, சாக்சி , வி.டி.வி கணேஷ், யோகிபாபு ஆகியோர் நடிக்கிறார்கள். படத்தின் முக்கிய காட்சிகள் ஊட்டி, ஐதராபாத் மற்றும் சூரத்தில் படமாக்கப்பட்டது. கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார். 

iruttu

கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்ள, ஆர்.சுதர்ஷன் படத்தொகுப்பை கவனித்துள்ளார். இப்படம் டிசம்பர் 6-ம் தேதியான நேற்று வெளியானது. தற்போது கலாட்டாவிற்கு அளித்த சிறப்பு பேட்டியில், இப்படம் உருவான விதம் குறித்து பகிர்ந்துள்ளார் நடிகர் சுந்தர்.சி. மேலும் தனது திரை அனுபவம் குறித்தும் பேசியுள்ளார்.