கவினை வெளியேற்ற முடிவா ? கவினுக்கு செக்மேட் வைத்த வீட்டினர்
By Sakthi Priyan | Galatta | August 26, 2019 09:00 AM IST
தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மக்கள் உள்ளம் கவர்ந்த நிகழ்ச்சி பிக்பாஸ். முதல் இரண்டு சீசன்கள் ஒளிபரப்பாகி முடிந்த நிலையில், தற்போது மூன்றாம் சீசன் துவங்கியது. கடந்த இரு சீசன் போலவே இந்த சீசனையும் உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்குகிறார்.
பிக் பாஸ் 3-க்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று அசத்தலாக துவங்கியது. தண்ணீர் மற்றும் எரிவாயுவிற்கு மீட்டர் பொறுத்தப்பட்டுள்ளது. இறுதியாக ஃபாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்தியா, மீரா மிதுன், ரேஷ்மா, சரவணன், சாக்ஷி, மதுமிதா, அபிராமி மற்றும் கஸ்தூரி வீட்டை விட்டு வெளியேறினார்கள்.
தற்போது வெளியான ப்ரோமோவில், அனைவரும் சேர்ந்து கவினை நாமினேட் செய்கிறார்கள். லாஸ்லியாவிடம் கவின் நடந்து கொண்ட விதம் பிறருக்கு பிடிக்கவில்லை என்ற காரணத்தினால், கவினை வீட்டை விட்டு வெளியேற்ற அதிகம் வாய்ப்பு உள்ளது.
#Day64 #Promo1 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று..#BiggBossTamil - தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/5p0RjKkJPv
— Vijay Television (@vijaytelevision) August 26, 2019