தனுஷ்- மாரி செல்வராஜ் படத்தின் படப்பிடிப்பு தகவல் !
By Sakthi Priyan | Galatta | December 31, 2019 13:41 PM IST
பரியேறும் பெருமாள் எனும் அற்புதமான படைப்பை தந்து சிறந்த இயக்குனராய் மக்கள் மனதில் விளங்குபவர் மாரி செல்வராஜ். அடுத்ததாக நடிகர் தனுஷ் வைத்து படம் இயக்கவுள்ளார். கலைப்புலி தாணு இந்த படத்தை தயாரிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைக்கவிருக்கிறார்.
படத்தில் ரஜீஷா விஜயன் நாயகியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. மலையாள நடிகர் லால் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார் என்ற செய்தியும் கிடைத்தது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி 2020 முதல் வாரத்திலிருந்து துவங்கப்படும் என்று நெருங்கிய திரை வட்டாரம் மூலம் தெரியவந்தது.
இப்படத்தின் டைட்டில் கர்ணன் என்று இணையத்தில் பேசப்பட்டு வருகிறது. தனுஷ் கைவசம் பட்டாஸ், கார்த்திக் சுப்பராஜ் இயக்கி வரும் D40 போன்ற படங்கள் ரிலீஸ் பட்டியலில் உள்ளது. இரண்டாம் படத்திலே இவ்வளவு எதிர்பார்ப்பை உண்டாக்கிய இயக்குனர் மாரி செல்வராஜின் திரை வளர்ச்சியை பாராட்டுவதில் பெருமை கொள்கிறது கலாட்டா.