அசுரன் படத்தின் வெற்றியை அடுத்து தனுஷ் பட்டாஸ் படத்தின் ரிலீஸை எதிர்நோக்கியுள்ளார்.இதற்கு அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள D40 படத்தின் ஷூட்டிங்கையும் முடித்துள்ளார்.இதனை தொடர்ந்து பரியேறும் பெருமாள் இயக்குனர் மாரி செல்வராஜுடன் இணைகிறார்.

Dhanush Mari Selvaraj Film Titled Karnan

கலைப்புலி தாணு தயாரிக்கும் இந்த படத்தின் ஷூட்டிங் சில நாட்களுக்கு முன் தொடங்கியது.மலையாள நடிகை ரஜிஷா விஜயன் இந்த படத்தின் கதாநாயகியாக நடிக்கிறார்.யோகி பாபு,லால்,அழகம் பெருமாள் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

Dhanush Mari Selvaraj Film Titled Karnan

இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.தற்போது இந்த படத்தின் டைட்டில் கர்ணன் என்று அதிகாரபூர்வமாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.இந்த அறிவிப்பை படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.