ஆபாச படம் எடுத்து மிரட்டிய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், கீழ்ப்பாக்கம் ராமநாதன் தெருவில் வசித்துவரும் 21 வயதான நவீத் அகமது மீது கடந்த சில வாரங்களுக்கு முன்பு பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார்.

Royapuram youth

அந்த புகாரில் நவீத் அகமது, தன்னை ஆபாச படம் எடுத்து வைத்துக்கொண்டு, தன்னை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தி வருவதாகக் குற்றம் சாட்டி உள்ளார். மேலும், தன்னுடைய ஆபாச படங்களை இணையத்தில் வெளியிட்டுவிடுவேன் என்று கூறி, தனக்குக் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் அந்த இளம் பெண் புகார் அளித்துள்ளார்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் போலீசார், நவீத் அகமதுவைக் கைது செய்ய முற்பட்டனர். ஆனால், அதற்குள் அவர் தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் தீவிரமாகத் தேடி வந்த நிலையில், அவர் ரெட்ஹில்ஸ் பகுதியில் தலைமறைவாகி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

assault

இதனையடுத்து, நவீத் அகமதுவை சுற்றி வளைத்து போலீசார், தற்போது கைது செய்துள்ளனர். அத்துடன், நவீத் அகமதுவுக்கும், அந்த இளம்பெண்ணுக்கும் எப்படி அறிமுகம் ஆனது, ஆபாச படங்கள் எப்படி நவீத் அகமதுவுக்குக் கிடைத்தது என்று கோணத்தில் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.