இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் அமலா பால் நடிப்பில் வெளியான படம் ஆடை. படத்தின் துவக்கத்திலேயே இல்லஸ்ட்ரேஷன் எனப்படும் காமிக்கல் ஸ்டைல் வரைப்படத்தில், திருவாங்கூரில் வாழ்ந்த நங்கேலியின் வரலாற்று கதையை (ஆடை சுதந்திரம் நிறைந்த கதையை) தெரிவித்த விதம் பிரமாதம். பிறகு கதைக்குள் நுழைகின்றனர். 

amalapaul

amala

sriranjani

amala

சுதந்திரமாய் சுற்றித்திரியும் சுதந்திர கொடியாக... இல்லை இல்லை... காமினியாக மீடியா வேலை பார்க்கும் பெண்மணியாக நடித்திருக்கிறார் மன்னிக்கவும் வாழ்ந்திருக்கிறார் நடிகை அமலா பால். டாக் மீடியாவில் பிராங்க் ஷோ நடத்தும் அமலா பால் நண்பர்களுடன் சேர்ந்தடிக்கும் லூட்டியிலே முதல் பாதி நகர்கிறது. விளையாட்டு வினையாகும் என்பார்கள், அதுபோல் நண்பர்களுடன் சேர்ந்து கட்டும் பெட்டிங்கில் ஈடுபடுகிறார் அமலா பால். பிறகு அவர் சந்திக்கும் சோதனைகள் பற்றியும், அதிலிருந்து தன்னை எப்படி காப்பற்றிக்கொள்கிறார் என்பதில் மீதி கதையும் நகர்கிறது. ஆல் பாதி ஆடை பாதி என்பார்கள். இந்த இரு பாதி தான் ஆடை படத்தின் கதைச்சுருக்கம்.

aadai

amala

aadai

amala

amala

தற்போது இந்த படத்தின் நீ வானவில்லா பாடலின் வீடியோ வெளியானது. ஷக்திஸ்ரீ பாடிய இந்த பாடலுக்கு பரத் சங்கர் வரிகள் எழுதியுள்ளார்.