6 வயது சிறுமியை கசக்கிப் பிழிந்த 3 சிறுவர்கள்.. பாவம் அலறித்துடித்த சிறுமி...
By Arul Valan Arasu | Galatta | August 24, 2019 17:20 PM IST
சத்தீஸ்கரில் 6 வயது சிறுமியை 3 சிறுவர்கள் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சட்டீஸ்கர் மாநிலம், ராய்ப்பூரில் உள்ள பள்ளியில், ஒன்றாம் வகுப்பு படித்து வரும் 6 வயது சிறுமியை, அதே பள்ளியில் 5 வகுப்பு படிக்கும் 10 வயது சிறுவர்கள் 3 பேர், பள்ளியின் கழிவறைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். கழிவறைக்குள் சென்றதும், ஒருவன் மட்டும் வெளியே காவலுக்கு நிற்க, அந்த சிறுமியை மாறி மாறி கசக்கிப் பிழிந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு, அந்த வழங்கியாகச் சென்ற ஆசிரியர் கடும் அதிர்ச்சியடைந்துள்ளார். இதனையடுத்து, 4 பேரையும் அவர், தலைமை ஆசிரியரிடம் அழைத்துச் சென்றுள்ளார். அவரும், 10 வயது உடைய 3 சிறுவர்களையும் கடுமையாக எச்சரித்ததாகத் தெரிகிறது.
இதனையடுத்து வீடு திரும்பிய சிறுமி, பள்ளியில் தனக்கு நேர்ந்த கொடுமைகளைத் தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து, சிறுமியின் பெற்றோர் வழக்குத் தொடர்ந்ததையடுத்து, சிறுமிக்கு மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டு, சிறுமி பாலியல் பலாத்காரத்திற்கு ஆட்படுத்தப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, 10 வயது சிறுவர்கள் 3 பேர் மீதும், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ், வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால், இன்னும் அந்த 3 சிறுவர்களும் கைது செய்யப்படவில்லை.