கடந்த ஆண்டு டிசம்பரில் சீனாவின் ஹூபே மாகாணத்தின் உகான் நகரில் தோன்றிய  கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் கோர தாண்டவமாடிவருகிறது. உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி 36 கோடிக்கும் மேற்பட்டோருக்கும் மேல் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை  27,143,863 க்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். மேலும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 10 லட்சத்தும் அதிகமான மக்கள் உலகளவில் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 78 லட்சத்து 39-ஆயிரத்து 615-பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 67 ஆயிரத்து 862-பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. கொரோனா தொற்றுநோய் காரணமாக சீனாவிற்கு எதிரான உலகளாவிய உணர்வுகள் பெருகி உள்ளது. அது தற்போது மேலும் அதிகரித்து உள்ளதாக சிஎன்என் பியூ ரிசர்ச் வெளியிட்ட புதிய ஆய்வை  மேற்கோளிட்டு செய்தி  வெளியிட்டு உள்ளது.

சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் மீதான நம்பிக்கையும் கடந்த 12 மாதங்களில் சரிந்துவிட்டது, அமெரிக்காவில் கணக்கெடுக்கப்பட்ட 77 சதவீதத்திற்கும் அதிகமானோர் உலகளாவிய விவகாரங்களில் "சரியானதைச் செய்வார்கள்" என்று ஜி மீது நம்பிக்கை இல்லை என்று கூறியுள்ளனர். பியூ ரிசர்ச் ஜூன் மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கு இடையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் இங்கிலாந்து உள்ப 14 நாடுகளில் 14,276க்கு மேற்பட்டவர்களிடம் கருத்து கணிப்பு நடத்தியது.

இது குறித்து பியூவின் மூத்த ஆராய்ச்சியாளரும் அறிக்கையின் இணை ஆசிரியருமான லாரா சில்வர் கூறினார்.  ஆய்வில் முக்கியமாக தெரியவந்து உள்ளது என்னவென்றால், சீனாவிற்கு எதிரான பார்வைகள் விரைவாக உயர்ந்து கொண்டிருக்கின்றன, மேலும் இது கொரோனா வைரஸைக் கையாள்வதில் சீனா ஒரு நல்ல வேலையைச் செய்யவில்லை என்பதோடு இணைந்துள்ளது" என்று கூறினார்.

பியூ ரிசர்ச் வாக்களித்த 14 நாடுகளில், அனைவருக்கும் சீனாவைப் பற்றி பெரும்பான்மையான எதிர்மறை பார்வை இருந்தது. பிரான்ஸ், ஜப்பான் மற்றும் இத்தாலி தவிர ஒவ்வொரு நாட்டிலும், சீனாவின் நற்பெயர் அதன் மிகக் குறைந்து வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றுநோய் சீனாவின் சாதக மதிப்பீடுகளில் சில விரைவான வீழ்ச்சிக்கு காரணமாக இருக்கலாம் என்று கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்களித்த 14 நாடுகளில், 61 சதவீதம் பேர் சீனா வைரஸ் வெடிப்பை மோசமாகக் கையாண்டதாகக் கூறினர்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் சீன அரசாங்கத்திற்கு எதிர்மறையான செய்திகளின் அலை காணப்படுகிறது. ஹாங்காங்கில் எதிர்ப்பாளர்கள் மீது பெய்ஜிங்கின் ஒடுக்குமுறைகள் மற்றும் சிஞ்சியாங் பிராந்தியத்தில் முஸ்லீம் பெரும்பான்மை இனக்குழுக்களை பெருமளவில் தடுத்து நிறுத்துவது பற்றிய விமர்சனங்கள் உலகம் முழுவதும் தலைப்புச் செய்திகளாக அமைந்தன.

மேலும் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நான்கு நாடுகளுக்கும் பொதுவான எதிரியாக உள்ள சீனாவின் வளர்ச்சி எழுச்சி பற்றி குவாட் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலக வரைபடத்தில் நாற்கர வடிவில் அமைந்திருக்கும் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய 4 நாடுகள் குவாட் அமைப்பை உருவாக்கி உள்ளன. இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை சேர்ந்த இந்த நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் நேற்று ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்றுள்ளது. 

கொரோனா பரவல் அச்சுறுத்தலுக்கு மத்தியில் நடந்த இந்த கூட்டத்தில் இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்காவின் மைக் பாம்பியோ, ஜப்பானின் டோஷிமிட்சு மொடேகி, ஆஸ்திரேலியாவின் மரைஸ் பெய்ன் ஆகியோர் பங்கேற்றனர். இந்த குவாட் குழுவின் அங்கத்தினராக விளங்கும் 4 நாடுகளின் பொதுவான அச்சுறுத்தலாக சீனா விளங்குகிறது. அந்தவகையில் லடாக் விவகாரத்தில் கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக இந்தியாவுடன் சீனா மோதி வருகிறது. 

கொரோனா தொற்று, வர்த்தக பிரச்சினை, தொழில்நுட்பம், ஹாங்காங்-தைவான் விவகாரங்கள், மனித உரிமை என பல்வேறு பிரச்சினை தொடர்பாக அமெரிக்காவும், சீனாவும் மோதி வருகின்றன. இதைப்போல ஆஸ்திரேலியாவுக்கும், சீனாவுக்கும் இடையேயான உறவு சமீபத்திய மாதங்களாக பாதிக்கப்பட்டுள்ளது. கிழக்கு சீனக்கடல் பகுதியில் ஜப்பான் நிர்வகித்து வரும் பல தீவுகளுக்கு சீனா உரிமை கொண்டாடுவது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் அந்த இரு நாடுகளும் மோதி வருகின்றன. 

குவாட் அமைப்பில் உள்ள நான்கு நாடுகளுக்கும் பொதுவான எதிரியாக சீனா உருவெடுத்துள்ள நிலையில், இந்த பிராந்தியத்தில் அந்த நாட்டின் வளர்ச்சி குறித்து இந்த நாடுகள் நேற்றைய குவாட் குழு கூட்டத்தில் விரிவாக ஆய்வு செய்தன. இந்த கூட்டத்தில் ஜப்பான் பிரதமர் யோஷிகைட் சுகாவும் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், கொரோனா தொற்றைப்போல ஏராளமான சவால்களை சர்வதேச சமூகம் எதிர்கொண்டு வருகிறது. இதனால்தான் பல நாடுகளுடன் முடிந்தவரை ஒருங்கிணைப்பை ஆழப்படுத்தி நமது பார்வையை பரவலாக்க வேண்டிய மிகச்சரியான நேரமாக இந்த காலகட்டம் உள்ளது என்றார். 

இந்தியா-சீனா ராணுவ கமாண்டர்கள் இடையே அக்.12-ல் 7-வது கட்ட பேச்சுவார்த்தை சீனாவின் வளர்ந்து வரும் உறுதிப்பாட்டை எதிர்க்கும் நமது தாராள மற்றும் திறந்த இந்தோ-பசிபிக் திட்டம், கொரோனா சவால்களுக்கு மத்தியில் முன்னெப்போதையும் விட முக்கியமானதாக இருக்கிறது என்றும் கூறியுள்ளார். இந்த பிராந்தியத்தின் அமைதி மற்றும் வளர்ச்சிக்கான பார்வையை கொண்டிருந்த ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்ஜோ அபே, தாராள மற்றும் திறந்த இந்தோ-பசிபிக் திட்டத்தின் முக்கிய காரணகர்த்தாவாக இருந்ததாக கூறிய சுகா, அவரது திட்டங்களை தொடர்வேன் என்றும் உறுதியளித்தார். பின்னர் ஜப்பான் பிரதமர் இல்லாமல், அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் விரிவான ஆலோசனை கூட்டத்தை நடத்தினர். 

அந்தவகையில் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருடன் அவர் நடத்திய சந்திப்பின்போது, பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவுகள், சீனாவின் எழுச்சிக்கு மத்தியில் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ஒத்துழைப்பை பலப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். அத்துடன் இந்தியா எதிர்கொள்ளும் பாதுகாப்பு சவால்கள் குறித்தும் இருவரும் ஆலோசனை நடத்தியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே ஜப்பான், இந்தியா, ஆஸ்திரேலியா நாட்டு வெளியுறவு அமைச்சர்களுடன் மைக் பாம்பியோ, தனித்தனியாக சந்தித்து பேசினார். இதைப்போல ஜப்பான் பிரதமர் யோஷிகைட் சுகாவையும் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார். 

ஜப்பானின் புதிய பிரதமராக சுகா கடந்த மாதம் பதவியேற்றிருக்கும் நிலையில், அவருடனான ஜெய்சங்கரின் முதலாவது சந்திப்பு இதுவாகும். இந்த சந்திப்பு குறித்து ஜெய்சங்கர் தனது டுவிட்டர் பக்கத்தில், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பாம்பியோவுடனான சந்திப்பு மூலம் எனது டோக்கியோ பயணம் தொடங்கி இருக்கிறது. பல துறைகளில் நமது ஒத்துழைப்பு வளர்ந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மைக்காக இணைந்து உழைப்போம் என்று பதிவிட்டுள்ளார்.