2 வதும் பெண் குழந்தை பிறந்ததால் கடும் ஆத்திரம் அடைந்த பெற்ற தந்தை, துப்பாக்கியால் 5 முறை அந்த பச்சிளம் குழந்தையை சுட்டு கொன்ற சம்பவம், கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

பாகிஸ்தான் நாட்டில் தான் இந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

பாகிஸ்தான் நாட்டில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் மியான்வாலி மாவட்டத்தில் ஷாஜீப் என்பவர் வசித்து வருகிறார். 

ஷாஜீப்க்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முறைப்படி திருமணம் நடைபெற்ற நிலையில், அவருக்கு முதலில் பெண் குழந்தை பிறந்து உள்ளது.

தற்போது, அந்த பெண் குழந்தைக்கு 2 வயது ஆகும் நிலையில், ஷாஜீப்பின் மனைவி மீண்டும் கருவுற்று உள்ளார். 

இதனையடுத்து, ஷாஜீப்பின் மனைவி அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரக்கு சமீபத்தில் 2 வதாக ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது. 

அதாவது, “ஷாஜீப் தனக்கு ஆண் குழந்தை வேண்டும்” என்று, எதிர்பார்த்துக்கொண்டிருந்த தருணத்தில், ஆண் குழந்தைக்கு பதிலாக அவருக்கு 2 வதும் பெண் குழந்தை பிறந்ததால், கடும் ஆத்திரமடைந்த உள்ளார்.

இதனால், கடந்த ஒரு வார காலமாக கடும் மன இளச்சலுக்கு ஆளான ஷாஜீப், “அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல்” மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இப்படியாக, குழந்தை பிறந்து அடுத்த 7 நாட்களும் பிறந்த குழந்தை மீது வெறுப்புடன் இந்த அந்த பெண் குழந்தையின் தந்தை ஷாஜீப், மிகவும் கொடூரமான முறையில் துப்பாக்கியால் 5 முறை சுட்டு, அந்த பச்சிளம் குழந்தையை கொன்று உள்ளார். 

இது குறித்து விரைந்து வந்த போலீசார், வழக்குப் பதிவு செய்து, அந்த கொடூர தந்தையை அதிரடியாக கைது செய்து, வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில், அந்த பெண் குழந்தையின் புகைப்படமும்ம் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.