பெண் ஊழியர் ஒருவரிடம் தகாத முறையில் நடந்து கொண்டதற்காக அப்போதைய மைக்ரோசாஃப் தலைவர் பில் கேட்ஸை, அந்நிறுவனம் எச்சரித்திருப்பது தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உலகின் மிகப் பெரிய பணக்காரர் 65 வயதான பில்கேட்ஸ், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனராக தற்போது வரை இருந்து வருகிறார். இவரது மனைவி 56 வயதான மெலிண்டா கேட்ஸ், அவருடன் வாழ்ந்து வந்த நிலையில், இந்த தம்பதிக்கு கடந்த 1994 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. 

இந்த தம்பதிக்கு “ரோரி ஜான் கேட்ஸ், ஜெனிபர் கேதரின் கேட்ஸ், போப் அடில் கேட்ஸ்” என மொத்தம் 3 வாரிசுகள் உள்ளனர். 

கடந்த ஆண்டு நிலவரப்படி பில்கேட்ஸ் சொத்து மதிப்பு ரூ.9 லட்சத்து 74 ஆயிரத்து 250 கோடி ரூபாயாக இருந்தது. இதனால், உலக பணக்காரர்களின் வரிசையில் அவர் கடந்த ஆண்டு 4 ஆம் இடத்திலும் இருந்தார்.

இப்படியான சூழ்நிலையில் தான், உலகின் மிகப் பெரிய பணக்காரரான பில்கேட்ஸ், தன்னுடைய 27 ஆண்டு கால திருமண வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டு வந்தார். 

அதாவது, பில்கேட்ஸ் - மெலிண்டா கேட்ஸ் தம்பதியர் கடந்த ஆண்டே பிரிந்து விட்டனர். இது பற்றி, கடந்த ஆண்டு மே மாதம் 3 ஆம் தேதி முறையான அறிவிப்பு வெளியானது.

அதாவது, “பாலியல் வழக்குகளில் தண்டனை பெற்றவரும், மறைந்த தொழிலதிபருமான ஜெப்ரி எப்ஸ்டெய்ன் என்பவருடன், மைக்ரோசாப்ட் அதிபர் பில் கேட்ஸ், மிக நெருங்கிய தொடர்பில் இருந்த காரணத்தால், அவரது திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்திருப்பதாக” அமெரிக்க ஊடகங்கள் அப்போது மிக கடுமையாக விமர்சித்து செய்திகள் வெளியிட்டது. 

“பில்கேட்ஸ் உடன் தொடர்பில் இருந்ததாகக் கூறப்படும் 66 வயதான ஜெப்ரி எட்வர்ட் எப்ஸ்டெய்ன், அமெரிக்காவில் நிதி சார்ந்த தொழில்களில்” ஈடுபட்டு வந்தவர் ஆவர்.

அத்துடன், “இவர் மீது பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு, அவர் சிறை தண்டனையும் பெற்றிருக்கிறார். அதுவும், சிறுமியரை வைத்து மிகப் பெரிய பாலியல், நெட்வொர்க் ஒன்றையும் நடத்தி வந்த வழக்கில், இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த சர்ச்சை அடங்குவதற்குள் தற்போது, மைக்ரோசாப்ட் அதிபர் பில் கேட்ஸ் மீது, மீண்டும் ஒரு பாலியல் சர்ச்சை எழுந்திருக்கிறது.

அதாவது, “மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணிபுரிந்த பெண் ஒருவருடன், பில்கேட்ஸ் திருமணத்தைத் தாண்டிய கள்ளக் காதல் உறவில் இருந்தார்” என்பது தான் அந்த குற்றச்சாட்டு. இதன் காரணமாக, கடந்த சில மாதங்களுக்கு முன்பு, பில் கேட்ஸ் - மெலிண்டா கேட்ஸ் தம்பதியினர், தங்களது விவாகரத்தை முறைப்படி அறிவித்தனர். இதனால், அவர்களது 27 ஆண்டுக்கால திருமண உறவு முடிவுக்கு வந்தது.

குறிப்பாக, மைக்ரோசாப்ட் நிறுவன  முழு நேர பெண் ஊழியர் ஒருவருக்கு பில் கேட்ஸ் தகாத முறையில் இமெயில் அனுப்பியது கண்டறியப்பட்டதாகவும், பில் கேட்ஸ் அந்த பெண் ஊழியரை சந்திப்பதற்காக அலுவலகத்துக்கு வெளியே வரச் சொன்னதாகவும் அந்த இமெயிலில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

அத்துடன், அந்த பெண்ணுடன் ஏற்கனவே 20 ஆண்டுகளாக பில் கேட்ஸ் உறவு  வைத்துக் கொண்டதாகவும், மைக்ரோசாப்ட் நிறுவனம் கூறி உள்ளது. 

இந்த இமெயில் விவகாரம் தெரிய வந்ததை அடுத்து, மைக்ரோசாப்ட் இயக்குனர்கள் குழுவினர் பில் கேட்ஸ் இதனை கை விடுமாறு எச்சரித்ததாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டு உள்ளது. 

மேலும், பில் கேட்ஸ் இதனை ஒப்புக்கொண்டு, இனி இப்படி நடக்காது என்று, அந்த நேரத்தில் அவர் மன்னிப்பு கோரியதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. 

உலகின் மிகப் பெரிய பணக்காரராக திகழந்த பில் கேட்ஸ், கொடையாளராகவும் திகழ்ந்தார். கேட்ஸ் மெலிண்டா என்ற அறக்கட்டளை மூலம் பல்வேறு சமூக பணிகளையும் அவர் தொடர்ச்சியாக செய்து வந்தார். இதனால், அவருக்கு உலக சமூகத்தில் பெரிய அளவிலான மதிப்பு இருந்த வந்த நிலையில், அந்த மதிப்பு  சரிவுக்கு குறிப்பிட்ட இந்த பெண்ணே காரணமாக இருக்கலாம் என்றும், தற்போது தகவல்கள் வெளியாகி, உலக அளவில் வைரலாகி வருகிறது.