“மரியுபோலில் போர் நிறுத்தம் செய்து” ரஷ்யா படைகள் பின்வாங்கினாலும், உக்ரைன் நாட்டின் மற்ற பகுதிகளில் போர் தொடர்ந்து நீடித்து வருகிறது.

ரஷியா - உக்ரைன் போர் இன்று 36 வது நாளாக இன்று வரை தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த நிலையில் தான், ரஷ்யா தனது ஒட்டு மொத்த பலத்தை திரட்டி, உக்ரைன் மீது தொடர்ச்சியாக மிக கடுமையாக தாக்குதலை நடத்திக்கொண்டிருக்கிறது. 

அத்துடன், உக்ரைன் நகரங்களிலும் தாக்குதல் தொடர்ந்து நடந்து வருகிறது என்றும், அங்குள்ள கார்கிவ், மரியுபோல் உள்பட பல நகரங்கள் ரஷ்ய படைகள் தங்களது தாக்குதலை தொடர்ந்து வருகிறது என்றும், நேற்று இரவு வரை அங்கிருந்து வரும் தகவல்கள் தெரித்தன. 

அப்போது தான், “உக்ரைன் நாட்டில் இருக்கும் செர்னோபில் நகரில் உள்ள அணு உலையில் வைக்கப்பட்டிருக்கும் ஆயுதங்கள் எப்போது வேண்டுமானாலும் வெடித்து சிதறலாம் என்றும், இதனால் அந்நகரில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு ரஷ்ய படைகளுக்கு உக்ரைன் எச்சரிக்கை” விடுத்திருந்து. 

அதாவது, உக்ரைன் மீது ரஷ்யாவின் போர் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், உக்ரைனின் பல முக்கிய நகரங்கள் ரஷ்யாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டன என்றாலும், உக்ரைன் தலைநகர் கீவ்வை கைப்பற்றும் ரஷ்யாவின் முயற்சிக்கு உக்ரைன் ராணுவம் தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறது. அதனால், உக்ரைனின் செர்னோபில் நகரை ரஷ்ய ராணுவம் அண்மையில் கைப்பற்றியிருக்கும் நிலையில், அந்த நகரில்தான் ரஷ்ய ராணுவம் அளவுக்கு அதிகமாக குவிப்பட்டு,  கீவ் நகரை கைப்பற்ற தீவிரம் காட்டி வந்தன. அந்த நகரில்தான் 1986 ஆம் ஆண்டில் மிகப் பெரிய விபத்துக்கு உள்ளான அணு உலை அமைந்திருக்கிறது. 

இந்த சூழலில் தான், உக்ரைன் பிரதமர் இரினா வெரெஷ்சுக் நேற்று வெளியிட்ட டிவிட்டர் பதிவில், “செர்னோபில் அணு உலைக்கு மிக அருகில் ரஷ்யா ஆயுதங்களை வைத்திருக்கிறது என்றும், ஒரு வேளை இது போரின் போது அந்த ஆயுதங்கள் வெடிக்க நேரிட்டால், அணு உலையில் மிகப் பெரிய வெடி விபத்து ஏற்படும் என்றும், இந்த அணு உலை செயல்படா விட்டாலும் அதற்குள் ஏராளமான வேதிப் பொருட்கள் இருப்பதால், அங்கு நிகழும் சிறு அலட்சியம் கூட அங்கே மிகப் பெரிய பேரழிவுக்கு வழி வகுத்துவிடும்” என்று, மிக விளக்கமாகவே எச்சரிக்கை விடுத்திருந்தார்.

“இதனால், அந்த நகரில் இருந்து ரஷ்ய படைகள் உடனடியாக வெளியேற வேண்டும்” என்றும், அவர் தனது எச்சரிக்கையில் கூறியுள்ளார். ஒருவேளை செர்னோபி அணு உலை வெடிக்கும் பட்சத்தில், அங்கு குவிக்கப்பட்ட ஒட்டுமொத்த ரஷ்ய படைகளும் அப்படியே மொத்தமாக அழிந்து போகும் சூழல் உருவாகி உள்ளதால், உக்ரைனில் முகாமிட்டுள்ள ஒட்டுமொத்த ரஷ்ய வீரர்களும் உயிர் பயத்தில் உரைந்து உள்ளதாகவும், நேற்று மாலை செய்திகள் வெளியாகி, பெரும் பீதியை ஏற்படுத்தியிருந்தன.

இந்த நிலையில் தான், “மரியுபோலில் போர் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், செர்னோபில் அணு உலையை விட்டு ரஷிய வீரர்கள் விலகி வருவதாகவும்” பென்டகன் கூறியுள்ளது.

அதே நேரத்தில், உக்ரைன் நாட்டின் பிற பகுதிகளின் மீது தொடர்ந்து தாக்குதலை நடத்தி வரும் ரஷ்யா, கிவ்வைச் சுற்றியுள்ள பகுதிகளில் 20 சதவீத படைகளை மீண்டும் ரஷ்யா நிலைநிறுத்த தொடங்கி உள்ளதாகவும், பென்டகன் தெரிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.