மதுபான பாட்டிலை சொருகி, என்னை கடுமையாக துன்புறுத்தி பாலியல் கொடுமை செய்தார்” என்று, பிரபல நடிகர் மீது, அவரது மனைவியான பிரபல நடிகை பகிரங்கமாக குற்றச்சாட்டி உள்ளார்.

பிரபல ஹாலிவுட் நடிகர் ஜானி டெப் மீது தான், அவரது மனைவியும் பிரபல ஹாலிவுட் நடிகையுமான அம்பெர் ஹெர்ட் இந்த பகிரங்கமான குற்றச்சாட்டை சுமத்தி உள்ளார்.

பிரபல ஹாலிவுட் படமான “பைரேட்ஸ் ஆப் தி கரீபியன்” படம், உலகம் முழுவதும் பேசப்பட்டது. இந்த படத்தின் மூலமாக உலக அளவில் பிரபலமான நடிகராக அறியப்பட்டார் நடிகர் ஜானி டெப்.

குறிப்பாக, “பைரேட்ஸ் ஆப் தி கரீபியன்” படத்தில், “கேப்டன் ஜாக் ஸ்பேரோ” என்னும் கதபாத்திரத்தில் நடித்து, அதன் மூலமாக அவர் உலக புகழ் பெற்றார். அவருக்கென்று தனியாக ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கிறது. 

அதன் தொடர்ச்சியாக, “ஆலிஸ் இன் வொண்டர்லேண்ட்” உள்ளிட்ட பல ஹாலிவுட் சினிமாக்களில், நடித்து தனது திறமையை இன்னும் வெளிப்படுத்தி புகழ் பெற்று திகழ்ந்த நடிகர் ஜானி டெப்புக்கும், அவரது 2 வது மனைவியான நடிகை ஆம்பர் ஹெர்ட்டுக்கும், கடந்த பல ஆண்டுகளாகவே பெரும் சட்டப் போராட்டமே நடந்துக்கொண்டிருக்கிறது.

அதாவது, “அக்வாமேன்” உள்ளிட்ட சில படங்களில் நாயகியாக நடித்து ரசகர்களை தனது அசத்தியானமான நடிப்பால் கட்டிப்போட்ட “அம்பெர் ஹெர்ட்” என்னும் நடிகையை, நடிகர் ஜானி டெப், கடந்த 2015 ஆம் ஆண்டு 2 வதாக திருமணம் செய்துகொண்டார்.

ஆனால், இவர்களுக்குள் தொடர்ந்து கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதால், தனது 2 வது மனைவியான “அம்பெர் ஹெர்ட்” டை, கடந்த 2017ம் ஆண்டு விவாகரத்து செய்தார்.

இதனையடுத்து, பிரபல ஹாலிவுட் நடிகையான அம்பெர் ஹெர்ட், “கணவர் ஜானி டெப், என்னை அடித்து துன்புறுத்தினார் என்றும், எனது விரலை துண்டித்தார் என்றும், இதற்கு நஷ்ட ஈடாக அவர் 350 கோடி ரூபாய் எனக்கு தர வேண்டும்” என்றும், பல ஆதாரங்களை அவர அந்நாட்டின் நீதிமன்றத்தில் சமர்பித்தார்.

கடந்த 3 ஆண்டுகளாக இது தொடர்பான வழக்கு, நடந்து வரும் நிலையில், தற்போது அந்த வழக்கு மீண்டும் சூடு பிடித்து உள்ளது.

இதற்கு, நடிகர் ஜானி டெப்பும் பதிலுக்கு குற்றச்சாட்டை சுமத்திய நிலையில், இருவரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி குற்றச்சாட்டை சுமத்தி வருவதால், சினிமா ரசிகர்கள் குழப்பமடைந்தனர்.

இந்த நிலையில் தான், இந்த வழக்கு மீண்டும் தற்போது விசாரணைக்கு வந்த நிலையில், நடிகை அம்பெர் ஹெர்ட் தற்போது ஒரு புதிய குற்றச்சாட்டை சுமத்தி உள்ளார்.

அதில், “ஆஸ்திரேலியாவுக்கு நாங்கள் சுற்றுலா சென்றிருந்த போது, ஜானி டெப் எனது உறுப்பில் மதுபான பாட்டிலை சொருகி பாலியல் ரீதியாக அவர் என்னை மிக கடுமையாக டார்ச்சர் செய்தார்” என்று, அவர் பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளார்.

“இதன் காரணமாக எனது பிறப்புறுப்பில் காயம் ஏற்பட்டு, நான் சிகிச்சைப் பெற்றேன்” என்றும், அதற்கான ஆதாரங்களையும் அவர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து உள்ளார்.

குறிப்பாக, “மற்றவர்களை போல் நானும் ஜானி டெப் நல்லவர் என்று அவரை நம்பித் தான் திருமணம் செய்தேன், ஆனால், அவர் குடி போதையில் அவர் கொடுக்கும் பாலியல் டார்ச்சர்கள் பிடிக்காமல் தான், நான் விவாகரத்து செய்ய முடிவுக்கே வந்தேன்” என்றும், நடிகை ஆம்பர் ஹெர்ட் பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளார். தற்போது, இந்த குற்றச்சாட்டு, இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.