இலங்கை அதிபர் பதவியை விட்டு விலகப்போவதில்லை என்றும் பெரும்பான்மையை நிரூபிக்கும் கட்சியிடம் ஆட்சியை ஒப்படைக்க தயார் என்றும் கோட்டபயா ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

அண்டை நாடான இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியில் தத்தளிக்கிறது. அந்த நாட்டில் அன்னியச்செலாவணி கையிருப்பு கரைந்துபோனதால் இறக்குமதி பாதித்துள்ளது. இதன் காரணமாக அத்தியாவசியப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, அவற்றின் விலை விஷம் போல ஏறி வருகிறது. எரிப்பொருட்களுக்கு தட்டுப்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.பெட்ரோல் நிலையங்களில் வாகன ஓட்டிகள் பல மணி நேரம் காத்துக்கிடக்கின்றனர்.

இந்த பொருளாதார நெருக்கடி,  தினமும் 13 மணி நேரம் வரையில் மின்வெட்டு உள்ளது. இது மக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியா பல்வேறு உதவிகளை செய்துள்ள நிலையில், சர்வதேச நிதியம் ஐ.எம்.எப்.பின் உதவியை இலங்கை அரசு நாடி நிற்கிறது. 

இந்நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு கொழும்பு நகரில் உள்ள அதிபர் கோத்தபய ராஜபக்சே மாளிகை முன் ஏறத்தாழ 5 ஆயிரம் பேர் திரண்டனர். பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்க தவறியதற்காக அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டும் என்று கோஷங்கள் முழங்கி போராட்டம் நடத்தினர்.

மேலும் கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் போராட்டங்கள்  தீவிரமடைந்து வரும் நிலையில், இலங்கையில் அவசர நிலை பிரகடனத்தை அறிவித்தார் அதிபர் கோத்பய ராஜபக்சே. இந்நிலையில் இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் மக்கள் படும் இன்னல்களைச் சுட்டிக்காட்டி  அந்நாட்டு அமைச்சர் ரோஷன் ரணசிங்கே பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.  

அன்றாட தேவையான காய்கறிகள் மற்றும் மளிகை உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் கடும் உயர்ந்திருக்கிறது. காகிதம் இல்லாததால் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கூட நடத்த முடியாத அளவிற்கு நிலைமை மோசமாகியிருக்கிறது. பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்கள் கிடைக்காததால் போக்குவரத்துக்கு ஸ்தம்பித்துள்ளது.

அமைச்சர் ரோஷன் ரணசிங்கே கூறியதாவது: இந்நிலையில் பொருளாதார நெருக்கடியை சுட்டிக்காட்டி அமைச்சர் ரோஷன் ரணசிங்கே  மே 1-ம் தேதி முதல் பதவியிலிருந்து விலகுவதாகக்கூறி அவர் அதிபர் கோட்டாபய ராஜபக்சவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக்கடிதத்தில்  உணவுப்பொருட்கள் மற்றும் எரிபொருட்களுக்காக மக்கள் வரிசையில் நிற்பது வேதனை அளிப்பதாக ரோஷன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் முன்னதாக பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பேற்று அதிபர் ராஜபக்சேவை பதவி விலகக்கோரி, அந்நாட்டு மக்கள் அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது ஏற்பட்ட வன்முறை காரணமாக  பல்வேறு பகுதிகளில் அவரச நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சூழலில்  அமைச்சர் ரணசிங்கே பதவி விலகியது இலங்கை அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக  பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் நிதி நெருக்கடையை சமாளிக்க சீனாவிடம் கடன் வாங்கிய இலங்கை பின்னர் அந்த கடனை கட்ட முடியாமல் சிக்கித்தவித்தது. மேலும், விவசாயத்திற்கு இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என அந்நாட்டு அரசு உத்தரவிட்டது. இதனால், உணவு பொருட்களின் உற்பத்தி குறைந்தது. இதன் காரணமாக இலங்கை ரூபாயின் மதிப்பு சர்வதேச சந்தையில் பெரும் சரிவை சந்தித்தது. இதனால், வெளிநாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் வாங்க முடியாமல் தவித்து வருகிறது. 

இதனால் இலங்கையில் உணவு, எரிபொருள் தட்டுப்பாடுடன், தினசரி பல மணி நேர மின்வெட்டும் நீடிக்கிறது. பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்துவருவதால் இலங்கை அரசுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதனைத்தொடர்ந்து  போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில் நேற்று இலங்கை அமைச்சரவையில் இருந்து பிரதமர் மகிந்தா ராஜபக்சே தவிர எஞ்சிய அமைச்சர்கள் அனைவரும் ராஜினாமா செய்தனர்.

இதனை தொடர்ந்து 4 புதிய அமைச்சர்களை  அதிபர் கோட்டபயா ராஜபக்சே நியமித்தார்.  ஆனால், அதிபர் கோட்டபயா, பிரதமர் மகிந்தா என அனைவரும் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் மக்கள், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன.

ஆனால் அதிபர் பதவியில் இருந்து விலகப்போவதில்லை என்று கோட்டபயா ராஜபக்சே தெரிவித்துள்ளார். கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் நேற்று நடத்த கூட்டத்தில் பேசியபோது, அதிபர் பதவியில் இருந்து தான் விலகப்போவதில்லை என்றும் எந்த கட்சி பெரும்பான்மையை, 113 உறுப்பினர்கள் நிரூபிக்கிறதோ அந்த கட்சியிடம் ஆட்சியை கொடுக்க தயாராக உள்ளேன் என அதிபர் கோட்டபயா ராஜபக்சே தெரிவித்துள்ளார். இதற்கிடையில், இலங்கை இணை அமைச்சர் பதவியை ஜீவன் தொண்டமான் ராஜினாமா செய்துள்ளார். இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இலங்கை நாடாளுமன்றம் இன்று கூடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.