“உடலுறவு கொள்ளாமலே ஓரல் செக்ஸ் மட்டும் வைத்துக்கொண்டு குழந்தை பெற்றெடுத்த 15 வயது சிறுமியால்” டாக்டர்கள் கடும் அதிர்ச்சியும், வியப்பும் அடைந்துள்ளனர்.

இப்படி ஒரு அதிசயம் தென்னாப்பிரிக்கா நாடான லெசோதோவில் தான் அரங்கேறி இருக்கிறது.

இந்த உலகில், “உடலுறவு வைத்துக் கொள்ளாமலே குழந்தை பெற்றுக்கொள்ள முடியுமா?” என்று கேட்டால், “ஆம், அதற்கு வாடகைத் தாய் முறையில் மட்டுமே உடலுறவு கொள்ளாமலே குழந்தை பெற்றுக் கொள்ள முடியும்” என்பதே மருத்துவ உலகம் கண்டுபிடித்த” சமீபத்திய கண்டுபிடிப்பாக இருக்கிறது.

“இப்படி, வாடகைத் தாய் முறையில், ஆணின் விந்தணுவையும், பெண்ணின் கரு முட்டைகளையும் வேறொரு பெண்ணின் கருப்பைக்குள் செயற்கை முறையில் செலுத்தி கருவை உருவாக்க” முடியும். ஆனால், “வாடகைத் தாய் முறையிலும் இல்லாமல், உடலுறவு முறையிலும் இல்லாமல் இங்கே குழந்தை பெற்றுக்கொள்ள முடியும் என்பது, இந்த விஞ்ஞானம் முன்னேறிய காலத்திலும் முடியாத” ஒரு விசயமாக இருக்கிறது.

ஆனால், மருத்துவ உலகையே ஆச்சரியப்படுத்தும் அளவுக்கு, இங்கே 15 வயது பள்ளி மாணவி ஒருவர், “உடலுறவு கொள்ளாமலும், வாடகைத் தாய் முறையில் இல்லாமலும், வெறும் ஓரல் செக்ஸ் மட்டுமே வைத்துக்கொண்டு, ஒரு குழந்தையும் பெற்றெடுத்திருக்கிறார்” என்றால், நம்ப முடிகிறதா? இதை நம்பித் தான் ஆக வேண்டும். இந்த சம்பத்தால், மருத்துவ உலகமே தற்போது ஆச்சரியத்திலும், வியப்பிலும் ஆழ்ந்திருக்கிறது.

தென்னாப்பிரிக்க நாடான லெசோதோவில் 15 வயது சிறுமி ஒருவர், அங்குள்ள பள்ளியில் படித்து வருகிறார். 

அப்போது, உடல் கிளர்ச்சி ஏற்பட்டு உள்ளது. எனினும், அந்த சிறுமியால் உடலுறவு கொள்ள முடியாது என்பதால், அவருடைய ஆண் நண்பர் ஒருவருடன், அந்த 15 வயது சிறுமி ஓரல் செக்ஸில் ஈடுபட்டு வந்திருக்கிறார். இப்படியாக சில நாட்கள் சென்ற நிலையில், அந்த சிறுமியின் பழைய ஆண் நண்பர் இந்த ஓரல் செக்ஸ் காட்சிகளை நேரில் பார்த்து கடும் அதிர்ச்சியடைந்து இருக்கிறார்.

இதனால், கடும் ஆத்திரமடைந்த அந்த சிறுமியின் முன்னாள் ஆண் நண்பர், ஓரல் செக்ஸில் ஈடுபட்டுக்கொண்டிருந்து அவர்கள் இருவருடனும் சண்டைக்குச் சென்று உள்ளார். இந்த சண்டையில், அவர்கள் மூவரும் மாற்றி மாற்றி சண்டை போட்டுக்கொண்ட நிலையில், பழைய ஆண் நண்பர் அந்த 15 வயது சிறுமியைக் கத்தியால் வயிற்றில் குத்தி உள்ளார். அதனைத் தடுக்க முயன்ற போது, அந்த சிறுமியின் கையிலும் காயங்கள் ஏற்பட்டு உள்ளது. இதனையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அதன் பிறகு, 9 மாதங்கள் சென்ற நிலையில் தான், அந்த சிறுமி தற்போது குழந்தை பெற்றெடுத்து உள்ளார். 

அத்துடன், “இந்த 15 வயது சிறுமிக்கு ஒருமுறை கூட மாதவிடாய் வந்ததில்லை என்றும், இருப்பினும் 9 மாதங்களாக அவரின் வயிற்றில் கரு வளர்ந்து வந்திருக்கிறது” என்றும் கூறப்படுகிறது.

மேலும், “இது பற்றி தனக்கு எதுவும் தெரியவில்லை” என்றும், அந்த அச்சிறுமி மருத்துவர்களிடம் கூறியிருக்கிறார்.

இது தொடர்பாக மிகப் பெரிய ஆராய்ச்சியே நடத்திய டாக்டர்கள், “ஓரல் செக்ஸ் மூலமாகவே சிறுமி எப்படி கர்ப்பமடைந்தார்?” என்கிற கேள்வியை தற்போது முடிவுக்குக் கொண்டு வந்து உள்ளனர்.

இது தொடர்பாக மருத்துவர்கள் கூறும்போது, “சிறுமி ஓரல் செக்ஸ் வைத்த பிறகு, அந்த சிறுமிக்கு வயிற்றில் ஏற்பட்ட கத்திக் குத்து காயத்தின் மூலம் சில விந்தணுக்கள் அவரது இனப்பெருக்க உறுப்புகளை அடைந்திருக்கலாம் என்றும், அப்போது காயம் காரணமாக அவருடைய உடம்பு அமிலம் உற்பத்தி செய்யாமல் இருந்திருக்கலாம் என்றும். அமிலம் உற்பத்தி இருந்திருந்தால் விந்தணுக்கள் இனப்பெருக்க உறுப்புகளை எட்ட முடியாமல் போயிருக்கலாம்” என்றும், விளக்கம் அளித்து உள்ளனர்.

“இது மருத்துவ ரீதியாக மிகவும் அபூர்வமான ஒரு நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது” என்றும், ஆய்வு நடத்திய மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.