ட்விட்டரை அடுத்து கோகோ கோலா கம்பெனியை வாங்க போவதாக டெஸ்லா நிறுவனத்தின் தலைமை அதிகாரியான எலன் மஸ்க் இன்று ட்விட்டரில் ட்வீட் செய்தார்.

சமூக வலைதளங்களில் பிரபலமான ஒன்றான டுவிட்டரை வாங்குவதற்கு உலக பணக்காரரும் டெஸ்லா நிறுவனத்தின் தலைமை அதிகாரியான எலான் மஸ்க் அண்மையில் டுவிட்டர் நிறுவனத்தில் 9.2% பங்குகளை வாங்கியுள்ளதாக அறிவித்தார். இதன்படி தற்போது டுவிட்டரில் மிகப்பெரிய பங்குதாரராக எலான் மஸ்க் இருந்து வந்தார். இதையடுத்து அவரை டுவிட்டர் நிர்வாக குழுவில் இணைக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், திடீரென டுவிட்டர் நிர்வாகக் குழுவில் இடம் வேண்டாம் என எலான் மஸ்க் நிராகரித்துவிட்டார். 

இந்நிலையில் எலான் மஸ்க் அதிரடியாக டுவிட்டர் நிறுவனத்தையே விலைக்கு வாங்க விரும்புவதாக தெரிவித்திருந்தார். டுவிட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்குவதற்கு எலான் மஸ்க்குடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. கிட்டதட்ட இந்த பேச்சுவாரத்தை இறுதிக்கட்டத்தை எட்டியதாக கூறப்பட்டு வந்த நிலையில் திடீர்ரென்று எலன் மஸ்க் ட்விட்டரை வாங்குவதாக அறிவித்தார். மேலும் Twitter CEO என்ற ஹேஷ்டாக்  இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

அதனைத்தொடர்ந்து டுவிட்டர் நிறுவனத்தை எலன் மஸ்க் இந்திய மதிப்பில் ரூ. 4,200 ஆயிரம் கோடிக்கு அமெரிக்க மதிப்பில் 44 பில்லியன் டாலருக்கு வாங்க எலான் மஸ்க் ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டது. எனினும், எப்போது அதிகாரபூர்வமாக தொகை பரிமாற்றம் நடக்கும்,  எலான் மஸ்க் வாங்கிய பிறகு டுவிட்டர் நிறுவனத்தை வழிநடத்த போவது யார் என்பது போன்ற விவரங்கள் தற்போது வெளியாகவில்லை. ட்விட்டர் நிறுவனத்தில் பல்வேறு மாற்றங்களை செய்ய விரும்புவதாக டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் கூறியுள்ளார். டுவிட்டர் நிறுவனத்தை இந்தியரான பராக் அகர்வால் தற்போது வழிநடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  எலான் மஸ்க்கிற்கு  ட்விட்டர் நிறுவனம் விற்கப்பட்டுள்ளதையடுத்து இணையத்தில் எலான் மஸ்க்   பழைய ட்வீட்  ஒன்று வைரலாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்  எலன் மஸ்க் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், பொது நம்பிக்கையை பெற டுவிட்டர் அரசியல் ரீதியில் நடுநிலையுடன் இருக்க வேண்டும். அப்பெடியென்றால் தீவிர வலதுசாரியையும், தீவிர இடதுசாரியையும் எரிச்சலூட்டுதல் என்று அர்த்தம் என பதிவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து மஸ்க் பதிவிட்டுள்ள மற்றொரு டுவிட்டில், அடுத்து நான் கோகோ கோலாவை வாங்கி அதில் மீண்டும் கோகேனை என்ற போதை பொருளை போட உள்ளேன் என பதிவிட்டுள்ளார்.

மேலும் மற்றொரு டுவிட்டில், நான் இப்போது மெக்டொனால்ட்சை வாங்கி அங்கு உள்ள ஐஸ்கிரீம் இயந்திரங்களை சரிசெய்யப்போகிறேன் என மஸ்க் பதிவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து எலான் மஸ்க் பதிவிட்டுள்ள மற்றொரு டுவிட்டில், டுவிட்டரை அதிகபட்ச மகிழ்ச்சி தரும் இடமாக மாற்றுவோம் என பதிவிட்டுள்ளார்.

அதனைத்தொடர்ந்து அடுத்தடுத்து டுவிட் செய்த எலான்  மஸ்க் மெக்டொனால்ட்சை வாங்குவது தொடர்பாக பதிவிட்ட டுவிட்டை நீக்கி அதன் ஸ்கீரின் ஷார்ட்டை மீண்டும் பதிவிட்டு, கேளுங்கள் என்னால் அதிசயங்களை நிகழ்த்த முடியாது சரியா என பதிவிட்டுள்ளார். டுவிட்டரை வாங்கும் நடவடிக்கையில் இறுதிகட்டத்தில் உள்ள எலன் மஸ்க் அடுத்தடுத்து டுவிட்டரில் கருத்துக்களை தெரிவித்து வரும் நிகழ்வு உலக அளவில் பேசுபொருளாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.