ரஷ்ய அதிபர் புதினின் ரகசிய காதலி மற்றும் அவரது முன்னாள் மனைவி மீது இங்கிலாந்து புதிய தடைகளை அதிரடியாக விதித்து உள்ளது.

உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர், கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி தொடங்கிய நிலையில், தற்போது இந்த போர் 100 வது நாளை நெருங்கிக்கொண்டு இருக்கிறது.

அதாவது, உக்ரைன் நாட்டின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி உள்ள ரஷ்ய படைகள், அங்கு பலவிதமான போர் குற்றங்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதாகவும், உக்ரைன் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. 

இதில் உச்சக்கட்ட கொடூரமாக, “உக்ரைன் நாட்டின் பெண்கள் மற்றும் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்து, அவர்களது உடலில் வெறிப்பிடித்த ரஷ்ய வீரர்கள் முத்திரை குத்தி அடையாளம் படுத்துவது தொடர்பான படங்களும் கடந்த மாதம் வெளியாகி” உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அத்துடன், உக்ரைன் வீதிகளில் பல 100 க்கணக்கான அப்பாவி மக்கள் சித்ரவதை செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வீடியோவும் வெளியான நிலையில், ஐ.நா.வில் இருந்து ரஷ்யாவை தற்காலிக நீக்கம் செய்து, ஐ.நா. சபை அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டது.

அதன் தொடர்ச்சியாகவே, “ரஷ்யப் படைகளின் மீது 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போர்க் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக” உக்ரைன் அதிர்ச்சி தரும் குற்றச்சாட்டை கடந்த சில தினங்களுக்கு முன்பு, அறிக்கையாக வெளியிட்டது.

இதனையடுத்து தான், இங்கிலாந்து பிரதமர் உக்ரைன் தலைநகருக்கு நேரில் வருகை தந்து, அங்குள்ள கள நிலவரங்களை ஆய்வு செய்தார். அப்போது, உக்ரைன் நாட்டிற்கு தேவையான போர் உபகரணங்களை தந்து உதவினார்.

எனினும், உக்ரைன் ரஷ்யா இடையேயான இந்த போரை நிறுத்த பல நாடுகள் தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. எனினும், இது போன்ற முயற்சிகள் அடுத்தடுத்து தோல்வியில் முடிந்தது.

இதனால், போரை நிறுத்தும் முயற்சியின் ஒரு நடவடிக்கையாக, ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் பொருளாதார தடைகளை அடுத்தடுத்து அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டன.

இவற்றுடன், ரஷ்ய அதிபர் புதினுக்கு புதிதாக நெருக்கடி தரும் விதமாக, இங்கிலாந்து தற்போது புதிய புதிய தடைகளை விதித்து வருகிறது.

அதன்படி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் ரகசிய காதலி மற்றும் முன்னாள் மனைவி மீது இங்கிலாந்து புதிய தடைகளை தற்போது விதித்து உள்ளது.

அதன்படி, ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று ஓய்வு பெற்ற ஜிம்னாஸ்டிக் வீராங்கனையான 38 வயதான அலினா கபேவா, ரஷ்ய அதிபர் புதினின் மனைவி என பரவலாக நம்பப்பட்டு வருகிறார். இவர், புதினின் 4 குழந்தைகளுக்கு தாய் என்றும் தகவல்கள் கூறப்படுகிறது. என்றாலும், இது தொடர்பான எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு புதின் இது வரை கூறவில்லை.

அத்துடன், ரஷ்ய அதிபர் புதினின் ரகசிய காதலி ஒருவர் இருக்கிறார். இவர், நேசனல் மீடியா குரூப் என்ற ரஷ்யாவில் உள்ள ஒரு மிக பெரிய தொலைக்காட்சி ஒன்றின் இயக்குனர்கள் வாரிய தலைவராக இருந்து வருவதுடன், ஆண்டொன்றுக்கு 80 லட்சம் யூரோ மதிப்பிலான சம்பளம் அவருக்கு வழங்கப்படுகிறது என்றும் கூறப்படுகிறது.  புதின் மற்றும் கபேவா ஜோடி ஒன்றாக இணைந்து இருக்கும் புகைப்படங்கள் பல்வேறு தருணங்களில் வெளிவந்திருக்கின்றன.

மேலும், ரஷ்யாவில் அதிபர் புதினை கடுமையாக விமர்சித்து வந்த எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி அமைத்திருந்த புலனாய்வு அமைப்புகளின் கருத்துப்படி, “ரஷ்யாவை சேர்ந்த அரசியல் செல்வாக்கு மிகுந்த வர்த்தக தலைவர்கள் பலர் அன்பளிப்பு என்ற வகையில், வீடு, பணம் மற்றும் பிற சொத்துகளை கபேவாவின் குடும்பத்தினருக்கு அளித்து உள்ளனர்” என்கிற ஒரு குற்றச்சாட்டும் உண்டு.

இந்த சூழலில் தான், உக்ரைன் - ரஷ்யா போர் நடந்துக்கொண்டிருக்கும் இந்த சூழலில், தனது ரகசிய காதலி கபேவாவை, சுவிட்சர்லாந்தில் உள்ள குறிப்பிட்ட ஒரு பகுதிக்கு புதின் அனுப்பி வைத்து உள்ளார் என்கிற ஒரு தகவலும் உண்டு.

இதனால், புதினின் ரகசிய காதலியான அலினாவை சுவிட்சர்லாந்தில் இருந்து வெளியேற்றும்படி கோரிக்கைகள் வலுத்தன. 

இதனால், புதினின் ரகசிய காதலியான அலினா மற்றும் புதினின் முன்னாள் மனைவியான லுட்மிலா ஆக்ரெத்னயா ஆகியோருக்கு எதிராக இங்கிலாந்து தற்போது புதிய தடைகளை அதிரடியாக விதித்து உள்ளன.

இது குறித்து கூறிய இங்கிலாந்து வெளியுறவு செயலாளர் லிஸ் டிரஸ், “புதினின் குடும்பம், பால்ய பருவ நண்பர்கள் மற்றும் புதின் அரசாட்சியில் பலன் பெற்ற நபர்கள், பதிலுக்கு புதினின் வாழ்க்கை முறைக்கு ஆதரவாக இருந்தவர்கள் ஆகியோர் மீது புதிய தடைகள் விதிக்கப்படுகின்றன” என்று, குறிப்பிட்டார். 

“புதினுக்கு உதவி செய்யும் அனைவர் மீதும் இங்கிலாந்து தொடர்ந்து தடைகளை விதிக்கும்” என்றும், அவர் தெரிவித்தார்.

அதன்படி, விளையாட்டு போட்டிகளில் இரந்து ஓய்வு பெற்ற ஒலிம்பிக் வீராங்கனையான அலினாவுக்கு எதிராக, இப்படியாக இங்கிலாந்து நாட்டிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இதே போன்று, ரஷ்ய கூட்டமைப்பின் அதிபர் புதினின் முன்னாள் மனைவியான லுட்மிலாவுக்கு எதிராகவும் இப்படியான தடை விதிக்கப்பட்டு உள்ளது.

குறிப்பாக, புதினின் நெருங்கிய குடும்ப உறுப்பினரான இகோர் புதின் மீதும், இந்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. ரஷ்ய தொழிலதிபரான இகோர், பெசெங்கா சர்வதேச கடல் துறைமுக இயக்குனராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.