இன்று முதல் ஆரம்பமாகும் மணிரத்னம் படம் ! மகிழ்ச்சியில் ரசிகர்கள்
By Sakthi Priyan | Galatta | July 19, 2019 12:00 PM IST
தமிழ் சினிமாவின் legendry இயக்குனராய் மக்கள் மனதில் பல ஆண்டுகள் நீங்கா இடம்பிடித்தவர் இயக்குனர் மணிரத்னம். அமைதியான திரை சூழல், மனதை வருடம் வசனங்கள், சீரான கதை கரு என தமிழ் சினிமாவின் தரத்தை உயர்த்திய பெருமை இவரை சேரும். இவரது இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான படம் செக்கச் சிவந்த வானம். உச்ச நட்சத்திரங்கள் நடித்த இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
இயக்கம் அல்லாது தயாரிப்பு பணிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிக்கும் அடுத்த படம் வானம் கொட்டட்டும் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தை தனா இயக்கிவருகிறார். விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா, ராதிகா, சரத்குமார், ஷாந்தனு, அமிதாஷ் பிரதன் ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடிக்கவுள்ளனர் என்ற செய்தி சமீபத்தில் வெளியானது.
தற்போது வெளியான தகவல் என்னவென்றால், இன்று முதல் துவங்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளதாம். இந்த படத்திற்கு சித் ஸ்ரீராம் இசையமைக்கவுள்ளாராம். இதற்கு முன் கோவிந்த் வசந்தா இசையமைக்கவிருந்தார் என்பது கூடுதல் தகவல்.