குழந்தைகாக தான் கல்யானம் செய்தேன் ! கண்ணீர் விட்ட சரவணன்
By Sakthi Priyan | Galatta | June 27, 2019 15:15 PM IST
தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மக்கள் உள்ளம் கவர்ந்த நிகழ்ச்சி பிக்பாஸ். முதல் இரண்டு சீசன்கள் ஒளிபரப்பாகி முடிந்த நிலையில், தற்போது மூன்றாம் சீசன் துவங்கியது. கடந்த இரு சீசன் போலவே இந்த சீசனையும் உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்குகிறார்.
பிக் பாஸ் 3-க்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று அசத்தலாக துவங்கியது. தண்ணீர் மற்றும் எரிவாயுவிற்கு மீட்டர் பொறுத்தப்பட்டுள்ளது. புதிதாக மாடல் மீரா மிதுன் பிக்பாஸ் வீட்டிற்கு வந்து சேர்ந்தார்.
தற்போது வெளியான ப்ரோமோவில், நடிகர் சரவணன் கண்ணீர் விட்டு தனது வாழ்வில் நடந்த சோதனையை பகிர்ந்து கொண்டார். தனது முதல் மனைவியை நினைத்து கண் கலங்கினார் சரவணன். அப்போது கூறுகையில் குழந்தைக்காக தான் இரண்டாம் கல்யாணம் செய்தேன். பெண்ணின் நிழலில் தான் வாழ்ந்தேன். இனி இரண்டாம் பாதி மகனுக்காக என்று உருக்கமாக பேசியுள்ளார்.
#பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil - தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/MJ5oXxlR0A
— Vijay Television (@vijaytelevision) June 27, 2019