லைக்கா தயாரிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் காப்பான். இப்படத்தில் நடிகர் சூர்யாவுடன் நடிகை சயீஷா மற்றும் பிரேம், பூர்ணா, போமன் இரானி, ஆர்யா நடிக்கின்றனர். மேலும் மலையால சூப்பர் ஸ்டாரான மோகன்லால் அவர்களும் சூர்யாவுடன் இணைந்து நடிக்கின்றனர். 

Samuthirakani Speaks About Suriya And Kaappaan

நடிகர் சமுத்திரகனி கொளஞ்சி படம் குறித்து பேசுகையில், காப்பான் படத்தில் சூர்யாவுடன் பணிபுரிந்த அனுபவம் குறித்தும் பேசினார். அப்போது பேசுகையில், மோகன்லால், ஆர்யா தூங்க சென்றவுடன் சூர்யாவும் சமுத்திரகனியும் பேசிக்கொண்டு இருப்பார்களாம். அப்போது கிராமப்புற மாணவர்களுக்கு, வசதி இல்லாமல் இருக்கும் மாணவர்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்று கூறி கொண்டிருப்பாராம்.

Samuthirakani Speaks About Suriya And Kaappaan

சமீபத்தில் கல்வி முறை குறித்து சூர்யா பேசியதற்கு பல தரப்பினரிடம் பாராட்டுக்கள் வந்தாலும், சில அறிவற்ற தரப்பினரிடம் கேள்வி எழும்பியது. யார் சூர்யா ? அவர் ஏன் கல்வி முறை பற்றி பேச வேண்டும் என்றெல்லாம் கேட்டனர். அதற்கு தக்க பதிலடி தந்துள்ளார் சமுத்திரகனி. அத்தனை ஏழை மாணவர்களின் கல்விக்கு உறுதுணையாக இருக்கும் சூர்யாவிற்கு மட்டுமே முழு தகுதி உள்ளது என்று கூறியுள்ளார்.