STR-ன் மாநாடு படம் கைவிடப்பட்டதா ? தயாரிப்பாளர் வெளிப்படை !
By Sakthi Priyan | Galatta | March 19, 2019 12:00 PM IST
நடிகர் STR மற்றும் ப்ளூப்பர் புகழ் இயக்குனர் வெங்கட் பிரபு இணையும் படம் மாநாடு. இப்படத்திற்கு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் ப்ரோடுக்ஷன் தயாரிக்கிறது. எப்போதும் தனது எதார்தமான கருத்தை மைய்யமாக வைத்து படம் இயக்கி வரும் வெங்கட் பிரபு, இப்படத்தில் அரசியல் கலந்த கமர்ஷியல் கருத்தை கதையில் வைத்து எடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியது.
STR-ன் UK பயணதிற்கு பின் மாநாடு படத்தின் பணிகள் துவங்கப்படும் என்ற செய்தி சமீபத்தில் வெளியாகியது. இந்நிலையில் இன்று காலை முதல் இணையத்தளத்தில் சிலர், மாநாடு படம் நிறுத்தப்பட்டது என வீண் வதந்திகளை கிளப்பி வந்தனர்.
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், விவரங்களை விசாரிக்க படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டது நம் கலாட்டா.
அப்போது பேசியவர், இச்செய்தி உண்மையில்லை. விரைவில் சீரான அப்டேட்டுடன் படக்குழு வருகிறோம் என்று கூறினார். ஏற்கனவே இயக்குனர் வெங்கட்பிரபுவிடம் கேட்டபோது, STR வந்தவுடன் பணிகள் துவங்கும் என்று கூறியிருந்தார் என்பது கூடுதல் தகவல். இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர் STR ரசிகர்கள்.
ஒரு படம் எடுப்பதென்பது, ஓர் குழந்தையை பெற்றெடுப்பதற்கு சமம். சினிமாவை நம்பி அதிகமானோர் பணிபுரிகிறார்கள். நிறைய குடும்பங்கள் சினிமாவை நம்பி உள்ளது. எனவே இதுபோன்ற வீண் வதந்திகளை கொளுத்தி போட வேண்டாம் என்று நெட்டிசன்களிடம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.