தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மக்கள் உள்ளம் கவர்ந்த நிகழ்ச்சி பிக்பாஸ். முதல் இரண்டு சீசன்கள் ஒளிபரப்பாகி முடிந்த நிலையில், தற்போது மூன்றாம் சீசன் துவங்கியது. கடந்த இரு சீசன் போலவே இந்த சீசனையும் உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்குகிறார். 

Mohan Vaidhya Exclusive Interview In Galatta

பிக் பாஸ் 3-க்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று அசத்தலாக துவங்கியது. தண்ணீர் மற்றும் எரிவாயுவிற்கு மீட்டர் பொறுத்தப்பட்டுள்ளது. இறுதியாக ஃபாத்திமா பாபு, வனிதா மற்றும் மோகன் வைத்தியா வீட்டை விட்டு வெளியேறினார்கள்.

Mohan Vaidhya Exclusive Interview In Galatta

தற்போது பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய மோகன் வைத்தியா, கலாட்டா குழுவிற்கு அளித்த சிறப்பு பேட்டியளித்துள்ளார். நாற்பத்தி எட்டு வருடமாக நாட்டியத்துறையில் உள்ளேன். யாரிடமும் அனுதாபம் பெற வேண்டும் என்ற எண்ணமில்லை. எனக்காக சந்தோஷப்பட, வருத்தப்பட, கிண்டல் செய்ய மக்கள் உள்ளனர். அப்போது பேசியவர், சாண்டி குறித்தும் ரேஷ்மா குறித்தும் பேசினார். மேலும் ஃபாத்திமா பாபு போல் செய்து காட்டியுள்ளார்.