நயன்தாராவை பற்றிய ராதாரவியின் கருத்து ! வெளுத்துவாங்கிய விக்னேஷ் சிவன்
By Aravind Selvam | Galatta | March 24, 2019 15:31 PM IST
நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள கொலையுதிர் காலம் படத்தின் ட்ரைலர் நேற்று வெளியிடப்பட்டது.இதனை ஒரு விழா அமைத்து படக்குழு வெளியிட்டது.இந்த விழாவில் திரைத்துறையை சேர்ந்த பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இதில் கலந்து கொண்டு பேசிய மூத்த நடிகர் ராதா ரவி நயன்தாராவை பற்றி கூறிய கருத்து பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.நயன்தாரா அவர் வாழ்க்கையில் என நடந்தாலும் பல வருடங்களாக சினிமாவில் தாக்குப்பிடித்து வருகிறார்.எங்கள் காலத்தில் சாமி வேடத்தில் நடிக்க ஒரு நடிகைக்கு நல்ல பெயர் இருந்தால் தான் சாமி வேடத்தில் நடிக்க முடியும் ஆனால் நயன்தாரா அவரது வாழ்க்கையில் என நடந்தாலும் பேயாகவும் நடிக்கிறார் சீதையாகவும் நடிக்கிறார் என்ற கருத்தை தெரிவித்துள்ளார்.இது சினிமா வட்டாரங்களில் சலசப்பை ஏற்படுத்தியுள்ளது .
இந்நிலையில் நயன்தாராவிற்கு மிகவும் நெருக்கமானவரும் இயக்குனருமான விக்னேஷ் சிவன் இதற்கு பதிலளித்துள்ளார்.நயன்தாராவின் நல்ல காலமானாலும் கேட்ட காலமானாலும் உடனிருக்கும் இவர் தற்போதும் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்.அந்த டீவீட்டை கீழே உள்ள லிங்கில் காணலாம்.