BREAKING : இயக்குனர் கார்த்திக் நரேனுடன் இணையும் அருண் விஜய் !
By Sakthi Priyan | Galatta | March 19, 2019 15:02 PM IST
தமிழ் சினிமா துறை கண்ட இளம் இயக்குனர்கள் பட்டியலில் இயக்குனர் கார்த்திக் நரேனுக்கு முக்கிய இடமுண்டு. கடந்த 2016-ம் ஆண்டு வெளியான துருவங்கள் பதினாறு படம் மூலம் தமிழ் திரை ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம்பிடித்துள்ளார்.
பின்பு அரவிந்த் சாமி, ஆத்மீகா, ஸ்ரேயா, இந்திரஜித் போன்ற நட்சத்திறங்கள் வைத்து நரகாசூரன் எனும் படத்தை இயக்கி ரிலீஸுக்கு தயாராக வைத்திருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.
தற்போது வெளியாகியுள்ள செய்தி என்னவென்றால், நடிகர் அருண்விஜய் வைத்து படம் இயக்கவுள்ளாராம். பேச்சு வார்த்தையில் இருக்கும் இந்த படம் குறித்த விவரம் விரைவில் அறிவிக்கப்படும். இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கத்திட்டமிட்டுள்ளனர் என்ற செய்தி நம் கலாட்டா செவிகளுக்கு எட்டியது.
தடம் படத்தின் வெற்றியை ருசித்த நடிகர் அருண்விஜய், வரிசையாக சிறந்த படங்கள் கமிட்டாகி வருவதால் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கின்றனர் சினிமா விரும்பிகள்.