விஸ்வாசம் படத்தின் வெற்றிக்கு பிறகு பிரபல தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி ஃபிலிம்ஸ், தனுஷுடன் அடுத்து ஒரு படத்தை தயாரிக்கிறது. இது இவர்களது 34 வது தயாரிப்பாகும். தொடரி படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக தனுஷுடன் சத்யஜோதி ஃபிலிம்ஸ் இணைந்துள்ளனர். எதிர்நீச்சல் ,காக்கிச்சட்டை ,கொடி ஆகிய வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் R .S துரை செந்தில்குமார் இப்படத்தை இயக்குகிறார். 

Dhanush Durai Senthil Kumar Project Gets A New Heroine Followed By Sneha

கொடி படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக தனுஷுடன் இணைகிறார். சினேகா முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தில் ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் பணியாற்றுகிறார். விவேக் மெர்வின் இசையமைக்கிறார்கள். குற்றாலத்தில் பூஜையுடன் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் 25 முதல் துவங்கப்படும் என்ற தகவல் சமீபத்தில் கிடைத்தது.

Dhanush Durai Senthil Kumar Project Gets A New Heroine Followed By Sneha

தற்போது மெஹரீன் பிர்சாதா இந்த படத்தில் முக்கிய ரோலில் நடிக்கவுள்ளார் என்ற செய்தி வெளியானது. நோட்டா, F2, ராஜா தி கிரேட், நெஞ்சில் துணிவிருந்தால் போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பது கூடுதல் தகவல்.

Dhanush Durai Senthil Kumar Project Gets A New Heroine Followed By Sneha