நடிகர் ஆரி மற்றும் பிக்பாஸ் புகழ் ஐஸ்வர்யா தத்தா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னை சாய் பாபா கோவிலில் பூஜையுடன் துவங்கியது. படப்பிடிப்பு தொடர்ந்து 40 நாட்கள் சென்னையில் நடைபெறும் என கூறப்படுகிறது. 

காதல் கதை அம்சம் கொண்ட படங்களுக்கு என்றுமே ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு உண்டு. 60'களில் மதம் காதலுக்கு தடையாக இருந்தது .80'களில் ஜாதி தடையாக இருந்தது. 2000த்தில் அந்தஸ்து அதாவது ஸ்டேட்டஸ் காதலுக்கு தடையாக இருந்தது. இன்றைய காலகட்டத்தில் காதலே காதலுக்கு தடையாக உள்ளது. இதை பிரதிபலிக்கும் விதமாக எல்லா தரப்பினரையும் கவரும் கதை களம் தான் இப்படம்.

இன்னும் பெயர் சூட்டப்படாத இந்த படத்தின் கதை கவிதை நயம் கொண்ட காதல் கதை. அய்யனார் படத்தை இயக்கிய S.S.ராஜமித்ரன் இப்படத்தை இயக்குகிறார். A.G.மகேஷ் இசை அமைக்க, தில்ராஜ் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். அதிக செலவு செய்து போட்டோஷூட் நடத்தி, மோஷன் போஸ்டர் விடாமல், எளிமையான முறையில் ஒரு டிக்டாக் வீடியோ மூலம் படத்தின் அப்டேட்டை பலரிடம் கொண்டு சென்ற விதம் பாராட்டிற்குரியது.