சர்கார் படக்குழுவினருக்கு எச்சரிக்கை கொடுத்த ஏ.ஆர்.முருகதாஸ்!
By Vinesh RV | Galatta | October 05, 2018 12:15 PM IST
இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள திரைப்படம் சர்கார். இப்படத்திற்கான போஸ்ட் புரோடக்ஷன்ஸ் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் சர்கார் படக்கூழுவினருக்கு எச்சரிக்கை கொடுக்கும் வகையில் ட்விட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ”அன்பான சர்கார் படக்குழுவினருக்கு,
இந்த படத்தை உருவாக்குவதிற்காக பலர் கடுமையான உழைப்பு போட்டுள்ளனர். இருந்தாலும், ஜூனியர் ஆர்டிஸ்ட்கள் நியாயமற்ற முறையில் படம் குறித்து பல பேட்டிகளை அளித்து வருகின்றனர். எங்களது அனுமதியில்லாமல் பேட்டி அளிப்பவர்கள் மீது வருங்காலத்தில் சட்ட ரீதியிலான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என பதிவிட்டுள்ளார்.
Dear Sarkar Cast n Crew,
— A.R.Murugadoss (@ARMurugadoss) October 5, 2018
So many people have put their hardwork for the making of this movie. Despite, there are many interviews by Junior artists, which is unethical. In the future, strict legal actions will be taken against people who give interviews without our consent.
சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படம் வரும் தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.