கடும் போராட்டத்திற்கு பிறகு வாக்களித்தார் நடிகர் சிவகார்த்திகேயன் !
By Sakthi Priyan | Galatta | April 18, 2019 14:08 PM IST
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் 18 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைப்பெற்று வருகிறது. உடனுக்குடன் செய்தியை வழங்குவதில் பெருமை கொள்கிறது கலாட்டா.
இளைஞர்களின் இன்ஸ்பிரேஷனான நடிகர் சிவகார்த்திகேயனின் வாக்காளர் அடையாள அட்டை விவரம், தேர்தல் ஆணையத்தின் இணையத்தில் விடுபட்டிருந்ததால், அவரால் வாக்களிக்க முடியாமல் போனது.
பின்னர் கடும் போராட்டத்திற்கு பிறகு தேர்தல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு போராடி, தனது வாக்கினை பதிவு செய்தார் SK.