2.0 படம் குறித்து ஆஸ்கார் வின்னர் கருத்து !
By Sakthi Priyan | Galatta | November 19, 2018 13:25 PM IST
லைக்கா ப்ரோடக்ஷன்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வரும் நவம்பர் 29-ம் தேதி வெளியாகிறது 2.0. இப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்துடன் ஏமி ஜாக்சன் மற்றும் அக்ஷய் குமார் முக்கிய பாத்திரத்தில் இணைந்து நடிக்கின்றனர்.
பிரம்மாண்டமாக உருவாகியுள்ள 2.0 படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்திருக்கிறார், ஆன்டனி எடிட்டிங் செய்திருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்திற்கு ரசூல் பூக்குட்டி சவுண்ட் டிசைனிங் செய்திருக்கிறார்.
அழகான ஏமி ஜாக்சன் ஒருபுறம் தோன்ற மறுபுறம் அக்ஷய் குமார் ஆக்ரோஷமாக நடித்து ட்ரைலரில் தெறிக்கவிட்டிருக்கிறார். ரோபோட்டிக் பாணியில் வெளிவந்த இப்படத்தின் பாடல்களை மதன் கார்கி எழுதியுள்ளார்.
படத்தின் சவுண்ட் வடிவமைப்பாளரான ஆஸ்கார் விருது பெற்ற ரசூல் பூக்குட்டி, நிச்சயம் இப்படம் வரலாற்று சாதனை படைக்கும் என தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டிருக்கிறார். மேலும் தனது சிறந்த ஒலி வடிவமைப்பை செயல்படுத்தியிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். SRL 4டி தொழில்நுட்பம் கொண்டு உருவாகும் முதல் இந்திய திரைப்படம் என்ற பெருமையும் 2.0 படத்திற்கே சேரும்.
That’s the first image of recording the first half of #2Point0 Historic moment first time ever in #SRL4D Sound from India. My best sound designed film ever @akshaykumar @SuperStarRajnii @shankarshanmugh #2Point0FromNov29th pic.twitter.com/OxEG5QdPzx
— resul pookutty (@resulp) November 19, 2018
முதல்முறையாக இந்த SRL 4டி சவுண்டில் தனது படத்தை வெளியிட வேண்டும் என்பது தனது நான்கு ஆண்டு கனவு என்று ஏற்கனவே இயக்குனர் ஷங்கர் ஆடியோ விழாவில் தெரிவித்திருந்தார்.