ஒட்டுமொத்த தமிழகமே எதிர்பார்த்து கொண்டிருக்கும் திரைப்படமான அஜித் நடிப்பில் 'துணிவு'  வரும் பொங்கலையொட்டி ஜனவர் 11 வெளியாகவிருக்கின்றது. இதனையடுத்து படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்கள், அப்டேட்டுகள் ரசிகர்களை குதூகலப்படுத்தி வருகின்றது. முன்னதாக இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையில் பாடல்கள் வெளியாகி வரவேற்பு பெற்றுவந்த நிலையில் . படத்தின் டிரைலர் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை கூட்டியது. அனைத்துதரப்பு ரசிகர்களும் விரும்பும் அளவு படம் உருவாகிவுள்ளது என டிரைலர் மூலம் தெரியவருகிறது. படத்திற்கான இறுதிகட்ட விளம்பர வேலைகள் நடைபெற்று கொண்டிருக்கும் இந்நிலையில் நமது கலாட்டா சேனலின் பிரத்யேக பேட்டியில் துணிவு படத்தின் கதாநாயகியாக நடித்த மஞ்சு வாரியார் கலந்து கொண்டார். இதில் துணிவு குறித்த சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். ஜனவரி 11 வெளியாகவிருக்கும் துணிவு படத்தின் எதிர்பார்ப்பு எந்தளவு உள்ளது படம் எப்படி இருக்கும் என்பது குறித்து அவர் பேசுகையில்,

“துணிவு படம் அனைவராலும் எதிர்பார்த்து காத்திருக்கும் படம், கொண்டாடப்படும் படம் னு சொல்லாம். குறிப்பாக அஜித் சாருடைய படம் என்றால் மக்கள் ரொம்ப ஆவலுடன் எதிர்ப்பார்த்துட்டு இருப்பாங்க.. அதனால அஜித் சாரை ரசிப்பவர்களுக்கு அவங்க மனசுக்கு திருப்தி ஆகுறா மாதிரி நல்லா இருக்கும். வினோத் சாரும் அஜித் சாரும் ரொம்ப கஷ்டப்பட்டு இருக்காங்க. படத்தில் வேலை பார்த்த டேக்னிஷன்கள், ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா எல்லாரும் கஷ்டப்பட்டிருக்காங்க..  நான் என்ன சொல்ல விரும்புறேன்னா அதிக எதிர்ப்பார்ப்பு யாரும் தலையில் எடுத்துக்க கூடாது. பிரஷ்ஷா.. பிளான்ங்க் மைண்டா.. படம் பாருங்க...” என்றார் நடிகை மஞ்சு வாரியார்.

துணிவு படம் அருமையான தொழில்நுட்பங்களுடன் அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வகையில் தயாராகி உள்ளதால் அதன் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் போகின்றது. ஒருபுறம் அஜித் குமாரின் ரசிகர்கள் படம் வெளியாகும் நாளை கொண்டாட ஆவலுடன் காத்திருக்கின்றனர். அனைத்து மக்களையும் திருப்தி படுத்தும் வகையில் துணிவு இருக்குமா என்பதை ஜனவரி 11 வெளியீட்டுக்கு பின்பே தெரியும், நிச்சயம் அஜித் ரசிகர்களுக்கு அக்ஷன் காட்சிகளுடனான் வர பிரசாதமாக அமையும் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை.

 

கலாட்டா மீடியாவில் துணிவு பட நாயகி மஞ்சு வாரியார் பேசிய வீடியோவை பார்க்க,