இந்தியாவின் முன்னணி பாடகர்களில் மிகப்பெரும் ஜாம்பவானாக , கிட்டத்தட்ட 50 ஆண்டுகளளாக இருந்து வந்தவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்.தனது காந்தக்குரலால் பல இதயங்களை மயக்கும் மகிமை கொண்டவர்.15 மொழிகளில் 40 ஆயிரம் பாடல்களைப் பாடியுள்ளார் ஒரே நாளில் 19 தமிழ் பாடல்களைப் பாடி சாதனை படைத்துள்ளார். மேலும் 40 படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

எம்.எஸ்.விஸ்வநாதன்,இளையராஜா போன்றவர்கள் தொடங்கி ஏ.ஆர்.ரஹ்மான்,அனிருத்,இமான் என்று தற்போதைய ஜெனரேஷன் இசையமைப்பாளர்கள் வரை அனைவருடனும் பணியாற்றியுள்ளார் எஸ்.பி.பாலசுப்ரமணியம்.மேலும் சில படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து அசத்தியுள்ளார் எஸ்.பி.பாலசுப்ரமணியம்.

ஆகஸ்ட் 5-ம் தேதி எஸ்.பி.பிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.கடந்த ஒரு மாதமாக தீவிர சிகிச்சையில் இருந்து வந்தார் எஸ்.பி.பி,சில நாட்களுக்கு முன் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது.ஆனால் நேற்று திடிரென்று இவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது.

இந்நிலையில் நேற்று செப்டம்பர் 25ஆம் தேதி மதியம் எஸ்.பி.பி காலமானார் என்ற செய்தி கேள்விப்பட்டு பல ரசிகர்கள்,பிரபலங்கள் என்று இந்தியாவே சோகத்தில் மூழ்கியுள்ளது.எஸ்.பி.பி குறித்த தங்கள் நினைவுகளையும்,இரங்கல்களையும் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.SPB-யின் பண்ணைவீட்டில் அவரது இறுதி சடங்குகள் அரசு மரியாதையோடு நடைபெற்றது.அவரது பார்ம் ஹவுஸில் தமிழக அரசு அறிவித்தபடி 72 குண்டுகள் முழங்க காவல்துறையின் மரியாதையுடன் எஸ்.பி.பி-யின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

இதில் கலந்துகொண்டு பல ரசிகர்களும்,திரை பிரபலங்களும் தங்கள் இறுதி மரியாதையை SPB-க்கு செலுத்தினர்.பெரிய நடிகர் யாரும் வராத நிலையில் விஜய் மட்டும் நேரில் வந்து SPB-க்கு தனது அஞ்சலியை செலுத்தினார்.விஜய் வருவது பெரிதாக யாருக்கும் தெரியவில்லை என்றாலும்,அவர் கிளம்பும்போது அவரை ரசிகர்கள் சூழ்ந்துகொண்டனர்.போலீசார் விஜயை பத்திரமாக அழைத்துச் செல்ல போது கூட்டத்தில் லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.இதில் ரசிகர் ஒருவரின் செருப்பு தவறி விழ அதனை விஜய் எடுத்து அந்த ரசிகர் கையில் கொடுத்துள்ளார்.விஜயின் இந்த எளிமையான செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.இந்த வீடியோ ரசிர்கர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.