தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி நடிப்பில், இயக்குனர் பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் தமிழரசன், இயக்குனர் A.செந்தில்குமார் இயக்கத்தில் காக்கி மற்றும் மூடர் கூடம் பட  இயக்குனர் நவீன் இயக்கத்தில் அக்னி சிறகுகள் என வரிசையாக திரைப்படங்கள் விரைவில் வெளிவர தயாராகி வருகின்றன.

இசையமைப்பாளர், நடிகர்,தயாரிப்பாளர்,படத்தொகுப்பாளர் என பன்முகத்தன்மை கொண்ட கலைஞராக வலம் வரும் விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் 2 படத்தின் மூலம் இயக்குனராகவும் களமிறங்குகிறார். 
தொடர்ந்து இயக்குனர் பாலாஜி குமார் இயக்கத்தில் க்ரைம் த்ரில்லர் திரைப்படமாக உருவாகும் கொலை படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் இயக்குனர் விஜய்மில்டன் இயக்கத்தில் மழை பிடிக்காத மனிதன் படத்திலும் நடித்து வரும் விஜய் ஆண்டனி அடுத்ததாக தமிழ் படம் படத்தின் இயக்குனர் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கிறார். இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது. 

விஜய் ஆன்டணியின் கோடியில் ஒருவன் மற்றும் கொலை ஆகிய படங்களைத் தொடர்ந்து 3-ஆக விஜய் ஆண்டனி நடிக்கும் இந்தத் திரைப்படத்தையும் இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்ச்சர் தயாரிப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து படத்தின் டைட்டில் விரைவில் வெளிவரவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.