தமிழ்த் திரையுலகின் குறிப்பிடப்படும் இயக்குனர்களில் ஒருவராக தனக்கே உரித்தான பாணியில் கலக்கலான என்டர்ட்டைனிங் திரைப்படங்களை கொடுத்து தொடர்ந்து ரசிகர்களை மகிழ்வித்து வரும் இயக்குனர் வெங்கட் பிரபு சென்னை 600028 திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர்.அடுத்தடுத்து இவரது இயக்கத்தில் வெளிவந்த சரோஜா, கோவா ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து அஜித் குமாருடன் இணைந்து வெங்கட்பிரபு இயக்கிய மங்காத்தா திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டாகியது. 

மேலும் தமிழ் சினிமாவில் ஒரு திரைப்படத்தின் 2-ம் பாகத்திற்காக அனைத்து ரசிகர்களும் ஆவலோடு காத்திருப்பார்கள் என்றால் அது அஜித் குமார் - வெங்கட்பிரபுவின் மங்காத்தா திரைப்படத்திற்காக தான் என்ன சொல்லலாம். கடந்த 2021ம் ஆண்டின் இறுதியில் வெங்கட்பிரபு இயக்கத்தில் சிலம்பரசன்.TR நடித்து வெளியான மாநாடு திரைப்படமும் பிளாக்பஸ்டர் ஹிட்டடிக்க கடைசியாக வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்த மன்மத லீலை திரைப்படமும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. 

அடுத்ததாக இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தமிழ் - தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகும் #VP11 திரைப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யா கதாநாயகனாக நடிக்கிறார். இயக்குனர் வெங்கட் பிரபுவிற்கு 11-வது படமாகவும் நடிகர் நாக சைதன்யாவிற்கு 22-வது படமாகவும் உருவாகும் இந்த (#NC22) புதிய திரைப்படத்தை தெலுங்குத் திரையுலகில் பிரபல தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஸ்ரீ்நிவாசா சித்தூரி தயாரிக்கிறார்.

நடிகை கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இருவரும் இணைந்து இசை அமைக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு இப்படத்தின் பூஜை நடைபெற்ற நிலையில், நாளை செப்டம்பர் 21-ஆம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்கும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதனை அறிவிக்கும் வகையில் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. அந்த போஸ்டர் இதோ…
 

With all ur love and blessings beginning my next #VP11 tomorrow with @chay_akkineni #NC22 @SS_Screens YES the shoot begins tomorrow @ilaiyaraaja @thisisysr pic.twitter.com/0ugXmSgDRD

— venkat prabhu (@vp_offl) September 20, 2022