தமிழ் சினிமாவில் கடந்த 2006 ல் ஆர்யா நடிப்பில் வெளியான வட்டாரம் திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகை வசுந்தரா சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்த இவர் கடந்த 2009 ல் மறைந்த பிரபல இயக்குனர் ஜெகநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான பேராண்மை படத்தில் வரும் 5 பெண்களில் ஒருவராக நடித்து பிரபலமானவர் வசுந்தரா. இந்த திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனி இடம் பிடித்தார். அதை தொடர்ந்து சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வெளியான தென் மேற்கு பருவகாற்று படத்தில் கதாநாயகியாக நடித்து கவனம் பெற்றார். பின் போராளி, சொன்னா புரியாது,கண்ணே கலைமானே, பக்ரீத், தலைகூத்தல் ஆகிய படங்களில் நடித்தார்.
சமீபத்தில் அமேசான் பிரைம் ஒடிடி பிரைமில் வெளியான மாடர்ன் லவ் சென்னை தொடரில் இடம் பெற்ற இயக்குனர் ராஜு முருகன் இயக்கிய லாலகுண்டா பொம்மைகள் என்ற எபிசோடில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் பாராட்டுகளை பெற்று வருகிறார் நடிகை வசுந்தரா.
இந்நிலையில் அவரது திரைப்பயணம் குறித்தும் மாடர்ன் லவ் சென்னை தொடரில் நடித்த அனுபவம் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை நமது கலாட்டா சினிமா சேனல் சிறப்பு பேட்டியில் பகிர்ந்து கொண்டார். அதில் லாலாகுண்டா பொம்மைகள் திரைப்படத்தில் கெட்ட வார்த்தை பேசி, மது அருந்துவது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருப்பது குறித்து கேட்கையில்,
“உலகத்துல கெட்ட வார்த்தை பயன்படுத்தாம யாரும் இல்ல.. உலகத்தில் குடிக்காம யாரும் இல்ல.. நான் படத்துல குடிச்சது ஜூஸ். நிஜமா குடிக்க சொன்ன முடியாது சொல்லியிருப்பேன். எனக்கு அதுல எந்த ஆச்சேபனையும் இல்லை.. ஒரு விஷயத்தை காட்டாம இருந்தா அந்த விஷயம் நடக்காம இருக்க போறது கிடையாது. ஒரு கலைஞருக்கு சுதந்திரம் வேண்டும். அதுவும் ஒரு எல்லைக்குள் இருக்க வேண்டும். குடிக்கறது காட்றது ஓகே.. எல்லோரும் குடிக்கனும் னு சொல்றது தப்பு..
நான் குடிக்கிறேன். அதனால் நீ குடிக்கனும்னு சொல்றது தப்பு.. ஆனால் உலகத்தில் குடிக்குறாங்க.. குடிக்கறது காட்றது சூழ்நிலைக்கு ஏற்ப அது சரி.. அதை இயல்பாக்குவது சரி.. இந்த கதையில் குடிக்கறது தேவைபட்டது. எல்லா கதைக்கும் தேவைப்படல.." என்றார் வசுந்தரா..
பேராண்மை படத்திற்கு பின் பெரியளவு திரைப்படங்களின் வாய்ப்பு கிடைக்காமல் போனது குறித்து கேட்கையில்,
“வாய்ப்பு கிடைக்கல னு வருத்தப்பட்டிருக்கேன். வருத்தபடலனா எனக்கு என்னமோ ஆயிடுச்சுனு அர்த்தம். ஏன்னு தெரியல ஆனா வருத்தப்பட்டிருக்கேன். நான் சினிமாவை விட்டு விலகலாம் னு நினைச்சேன் அப்போ 'தென்மேற்கு பருவக்காற்று ' படம் வந்தது. அந்த படத்தோட கதை கேட்கும் போது நான் ரொம்ப சந்தோஷப்பட்டேன். எனக்கு சீனு சாரோட பெண் கதாபாத்திரம் கவிதை மாதிரி இருக்கும். அவரோட கதையில ஒரு கதாபாத்திரம் பண்ணும் போது திருப்தி இருந்தது.” என்றார் வசுந்தரா.
மேலும் மாடர்ன் லவ் சென்னை - லாலாகுண்டா பொம்மைகள் தொடர் நடிகை வசுந்தரா அவர்கள் பகிர்ந்து கொண்ட பல சுவாரஸ்யமான தகவல் கொண்ட முழு வீடியோ இதோ..