இந்திய சினிமா கண்டிராத பிரமிப்பின் உச்சமாக வெளிவந்திருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படம் ஏகோபித்த வரவேற்பைப் பெற்ற பிளாக்பஸ்டர் ஹிட் ஆகி வசூலில் புதிய புதிய சாதனைகளை படைத்து வருகிறது. அமரர் கல்கி அவர்களின் அற்புத படைப்பான பொன்னியின் செல்வன் நாவலை தழுவி இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக பொன்னியின் செல்வன் திரைப்படம் தயாராகியுள்ளது.

லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரித்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு ஜெயமோகன் அவர்கள் வசனங்களை எழுத, தோட்டா தரணியின் கலை இயக்கத்தில் ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்துள்ளார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார்.

பொன்னியின் செல்வனின் முக்கிய கதாபாத்திரங்களில் சீயான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன், ஜெயராம், இளையதிலகம் பிரபு, விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா லெக்ஷ்மி, நிழல்கள் ரவி, ஷோபிதா, லால், அஷ்வின் காக்கமனு, ஜெயசித்ரா, கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

பிரம்மாண்டமாக ரிலீஸான பொன்னியின் செல்வன் திரைப்படத்தை ரசிகர்கள் தொடர்ந்து கொண்டாடி வரும் நிலையில் படப்பிடிப்பின் புதிய மேக்கிங் வீடியோவை ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் தற்போது வெளியிட்டுள்ளார். பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முக்கிய காட்சியின் படப்பிடிப்பின்போது கேமராவைத் தூக்கிச் சென்ற ரவிவர்மனின் கால் தவறி, கேமரா கைநழுவும் சமயத்தில் அவரது உதவியாளர் கேமராவை தாங்கிப்பிடிக்கும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ இதோ…
 

 

View this post on Instagram

A post shared by Ravi Varman (@r_varman_)