ரசிகர்களின் ஃபேவரட்டான நடிகர்களின் பட்டாளமாக சீயான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யாராய், த்ரிஷா, பிரகாஷ்ராஜ், ஜெயராம், சரத்குமார், பார்த்திபன், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, ரஹ்மான், விக்ரம் பிரபு, பிரபு ஆகியோர் ஒன்றிணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் அஸ்வின் காக்குமனு, நிழல்கள் ரவி, கிஷோர், ரியாஸ் கான், லால், நாசர், மோகன் ராமன் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக பிரம்மாண்டமாக தயாராகியிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் இணைந்து பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தயாரித்துள்ளன. 

தோட்டாதரணி கலை இயக்கத்தில், ரவிவர்மன் ஒளிப்பதிவில், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்யும் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். முன்னதாக பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாடலாக வெளிவந்த பொன்னி நதி பாடல் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் பிரபல பாடகர் திருமூர்த்தி தனக்கே உரித்தான ஸ்டைலில் பிளாஸ்டிக் குடத்தில் தாளம் போட்டபடி பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் பொன்னி நதி பாடலை பாடியுள்ளார். கடந்த சில வாரங்களாக விக்ரம் திரைப்படத்தின் பத்தல பத்தல பாடல், திருச்சிற்றம்பலம் திரைப்படத்தின் தாய்க்கிழவி பாடல் உட்பட பல பாடல்களை திருமூர்த்தி பாடிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வந்த நிலையில், தற்போது பொன்னி நதி பாடலை திருமூர்த்தி பாடியுள்ள வீடியோவும் வைரலாகியுள்ளது. அந்த வீடியோ இதோ…