திருமணத்துக்கு பிறகு ரீ என்ட்ரி கொடுக்கும் முன்னணி சீரியல் நடிகை !
By Aravind Selvam | Galatta | December 06, 2021 19:32 PM IST
கன்னடத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர் ஸ்ரேயா அஞ்சன்.இதனை அடுத்து கன்னடத்தில் ஒளிபரப்பான சில தொடர்களில் நடித்து சின்னத்திரையில் தனது என்ட்ரியை கொடுத்தார் ஸ்ரேயா அஞ்சன்.இவற்றின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தார் ஸ்ரேயா அஞ்சன்.
அடுத்தாக சன் டிவியின் சூப்பர்ஹிட் தொடரான நந்தினி தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து அசத்தினார் ஸ்ரேயா அஞ்சன்,இதன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார் ஸ்ரேயா அஞ்சன்.இதனை தொடர்ந்து கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான திருமணம் சீரியலில் ஹீரோயினாக நடித்தார் ஸ்ரேயா அஞ்சன்.
தனது நடிப்பால் பல ரசிகர்களை பெற்றார் ஸ்ரேயா அஞ்சன்.இவருக்கென்று தனியொரு ரசிகர் பட்டாளமே உருவானது.ஜனனி என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் பேராதரவை பெற்றார்.இதனை அடுத்து அன்புடன் குஷி தொடரில் சில மாதங்கள் நடித்தார் ஸ்ரேயா அஞ்சன்.
திருமணம் தொடரில் தன்னுடன் நடித்த சிந்துவுடன் காதல் மலர்ந்து அவரை கடந்த நவம்பர் 21 அன்று கரம்பிடித்தார் ஸ்ரேயா.தற்போது திருமணத்துக்கு பிறகு இவர் புதிய தொடர் ஒன்றில் நடிப்பதாக தகவல் கிடைத்துள்ளது.ஜீ தமிழில் ஒளிபரப்பாகவுள்ள புதிய தொடரில் ஸ்ரேயா அஞ்சன் ஹீரோயினாக நடிக்கிறார்,இந்த தொடர் குறித்த மற்ற அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Ajith Kumar's Valimai gets a new BIG release announcement - Breaking! Check out!
17/12/2021 08:15 PM