மக்களின் நம்பத்தக்க செய்தி நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்து நிற்பது நமது கலாட்டா நிறுவனம்.செய்திகள் மட்டுமின்றி பலருக்கும் அவர்களது திறமையை பாராட்டி அவ்வப்போது விருதுகளை வழங்கி அவர்களை கௌரவித்து வருகிறோம்.

அந்த வகையில் இந்த வருடம் எந்த ஒரு இணையதளமும் நடத்தாத அளவு மிக பிரம்மாண்டமாக திரைத்துறையினரை கௌரவிக்கும் படி The Galatta Crown 2022 விருது விழா நேற்று சென்னையில் நேரு உள்விளையாட்டு அரங்கில் கோலாகலமாக நடைபெற்றது.

திரைத்துறையில் சாதித்த பல அறிமுக கலைஞர்களுக்கும் பல முன்னணி நட்சத்திரங்களுக்கும் கௌரவித்து கலாட்டா பெருமை படுத்தியது.மேலும் சில அரசியல் சார்ந்த விருதுகள் மற்றும் திரைத்துறையினர் பங்கேற்ற உரையாடல் என பல அம்சங்கள் அடங்கிய மாபெரும் நிகழ்வாக இந்த விருது விழா நேற்று நடைபெற்றது.

பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ரன்வீர் சிங் The Galatta Crown 2022வில் முக்கிய விருந்தினராக பங்கேற்று தனது நடனம் எனர்ஜி உற்சாகமான பேச்சு என ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றார்.இவரை தவிர சிவகார்த்திகேயன்,நயன்தாரா,கீர்த்தி சுரேஷ்,க்ரிதி ஷெட்டி,பிரியங்கா மோகன்,கல்யாணி ப்ரியதர்ஷன்,அருண் விஜய்,யோகி பாபு,வெங்கட் பிரபு,விக்னேஷ் சிவன்,அனிருத்,ஜீ வி பிரகாஷ் என பல முன்னணி நட்சத்திரங்கள் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

மிக பிரம்மாண்டமாக நடைபெற்று முடிந்த இந்த நிகழ்வின் வீடியோக்கள் வெகு விரைவில் ரசிகர்களின் பார்வைக்கு வர இருக்கிறது.அவற்றை நீங்கள் கலைஞர் தொலைக்காட்சி மற்றும் நமது கலாட்டா யூடியூப் சேனலில் வெகு விரைவில் கண்டு மகிழலாம்.இந்த மிக பிரம்மாண்ட நிகழ்வை நடத்தி முடிக்க எங்களுக்கு உதவியாக இருந்த அனைவருக்கும் குறிப்பாக எங்களுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் ரசிகர்களுக்கும் நன்றியை தெரிவித்து மேலும் ஒரு பிரம்மாண்ட நிகழ்வுடன் விரைவில் உங்களை சந்திப்போம் என்று நம்பிக்கை தெரிவிக்கிறோம்.